கவிதை வாசல்
இன்சுவை தமிழ் கவிதைகள் மற்றும் ஹைக்கூ கவிதைகளின் பூங்கா....
செவ்வாய், ஜூலை 05, 2022
அறிவியல் தகடுகள்
இருள் முடிச்சு அவிழ வெளிச்ச ஊடுருவலில் கொள்ளைபோகும் காலம் மீட்டெடுக்க முடியாது தவிக்கின்ற மனிதம் அடுத்த நகர்வுக்கு தயாராகிறது அவ்வப்போது காலக்கண்ணாடி உடைக்கப்பட்டு எவ்வித பிரதிபலிப்புமின்றி வெற்றுச் சலனங்கள் அரங்கேறுகின்றன வரலாற்றுப் பதிவுகளில் அச்சு முறிந்த சூட்சுமத்தில் பயணித்திருக்கிறது வெற்றியாளர்களின் சாகசங்கள் சுவடுகள் தேய்ந்து வர புதுப்பித்து வருகின்றன அறிவியல் தகடுகள் ......கா.ந.கல்யாணசுந்தரம்
வெள்ளி, ஏப்ரல் 15, 2022
எது கவிதையென்றும் இதுதான் கவிதையென்றும் நம்மால் கூற முடியுமா ?
எது கவிதையென்றும் இதுதான் கவிதையென்றும் நம்மால் கூற முடியுமா ?
************************************************************************************************
எது கவிதையென விளக்கம் கொடுத்து பலர் தோற்றுப்போயிருக்கிறார்கள். கவிதைப்பற்றிய இலக்கணங்கள் அதனதன் வடிவத்தைப் பொறுத்தது. மரபு வழிக் கவிதைகளுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. அவையாவும் செய்யுள் வடிவங்கள். யாப்பு அணி இலக்கணங்களைக் கொண்டு பக்தி இலக்கியம் முதல் அழியாத சிறப்புத் தன்மையுடன் அவை இன்றும் மணம் வீசுகின்றன. உரைநடைக் கவிதைகள் தோன்றிய காலத்தில் புதுக்கவிதை வடிவம் உருவானது. இதற்கு வரலாற்றுப் பின்னணியாக எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களது புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும் படித்தால் புரிந்து கொள்ளலாம்.
புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’ எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர்…
“ பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே “ என்று உரைத்தார்
நன்னூலார்…
“சுவை புதிது பொருள்புதிது வளம்புதிது சொல்புதிது சோதிமிக்க நவகவிதை” என்றார் பாரதி.
Free Verse என்ற கவிதை அமைப்பும் ஆங்கிலத்தில் இருந்தது புதுக்கவிதையின் தோற்றம் வளர்ச்சி நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது.
பிறமொழி கவிதை இலக்கியத்திலிருந்து தமிழில் வடிவங்களை இறக்குமதி செய்வதில் தவறில்லை. ஜப்பானிய மொழியிலிருந்து ஹொக்கு…ஹைக்கூவையும் தெலுங்குமொழியின் நானிலு …தன்முனைக் கவிதைகள் போன்றவை தமிழ் மொழிக்கேற்ப உருவெடுத்து கவியுலகில் வலம் வருகின்றன. பெரும்பாலான கவிஞர்கள் விரும்பி எழுதுகிறார்கள்.
சமூகப் பார்வையோடும், வாழ்வியல் நோக்கோடும் எழுதப்படுகின்ற கவிதை வரிகள் எந்த வகைமையாயினும் உயிர்ப்புடன் விளங்கும். படிப்போரின் மனத்தில் எப்படி இடம்பிடிக்கிறது என்பதை ஆராய்ந்து அறிந்தோமானால் அக்கவிதைச் சொற்கள் விதைக்கின்ற சிந்தனைகள் மற்றும் கருத்தாழம் கொண்டவைகளாக இருத்தலே காரணமெனலாம்.
மரபாக இருக்கட்டும், புதுக்கவிதை மற்றும் நவீனக் கவிதைகளாகட்டும் பலரது படைப்புகளில் நீர்த்துப் போன தன்மையைக் காண்கிறோம். இலக்கணம் சரியாக அமைந்த மரபுக்கவிதைகள் பலவற்றில் சொல்ல வந்த கருத்தினை சரியாக சொல்லாமல் படிப்போருக்கு விளங்காமல் போனதுண்டு. இதே போலத்தான் நவீனக் கவிதைகள் பல பலமுறை படித்தபின்னே அதன் படிமக் கூறுகள் விளங்குவதுண்டு. ஹைக்கூ கவிதைகள் பெரும்பாலும் எளிமையான சொற்களோடு எழுத்தினாலொழிய அவை மக்கள் மனதில் இடம்பெறாது. கவிதைகளின் வடிவம் பல காலச்சூழலுக்கு ஏற்ப புதிய புதிய உத்திகளோடு உருக்கொண்டு கவிஞர்களின் கரங்களில் படைக்கப்படுகிறது.
கவிதை என்ற சொல்லுக்கு வேண்டுமானால் விளக்கங்கள் பலவிதமாக கொடுக்கலாம்…ஆனால் இதுதான் கவிதை எனச் சொல்லமுடியாத சூழல் எப்போதுமே கவியுலகில் நிலவி வருகிறது. புதுப் புது வடிவங்களில் அதன் பயணிப்பு தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.
எவ்வகைக் கவிதையாயினும் அந்த வகைமையில் நாம் பயிற்சி பெறுகின்றபோது படிப்போரின் மனதில் இடம்பிடிக்கும் தன்மையதாய் இருக்கவேண்டும். ஆக….மரபு, புதுக்கவிதை, நவீனம், ஹைக்கூ, தன்முனை என எவ்வகைமையாயினும் அதனதன் சிறப்பிலிருந்து மாறுபடாது. இக்கவிதை வகைமையில் சிறந்து விளங்குவோர் தமிழ் கவிதை வரலாற்றில் இடம் பிடிப்பர்.
கவிதைகள் அவரவர் பெற்ற பிள்ளைகளைப் போன்றது. மற்றவர்களின் பார்வையில்தான் அந்தந்தக் கவிதைகளின் படைப்பாளிகள் போற்றப்படுவர்.
படிப்போரின் மனநிலையை கவிதைகள் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைப் பொறுத்தது அதன் பயணிப்பும் பெருமையும்.
மரபுக் கவிதை :
++++++++++++
அன்று:
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்
டெல்லார்க்கும் பெய்யு மழை.
…….ஒளவையார்
இன்று:
புல்லின் நுனிவானம் புன்னகைப்பூ உள்நாணம்
சொல்லில் கருவேற்றிச் சொக்கவைக்கும்!--முல்லையென
ஒல்லும் வகையெல்லாம் ஊரை விலைபேசும்
வெல்லுதமிழ் வேரெங்கள் வேல்!
….கவிக்கோ துரை வசந்தராசன்
புதுக்கவிதை :
++++++++++++
அன்று :
பாதை முள்
படுக்கை முள்
இருக்கை முள்
வாழ்க்கை முள்
ஆன மனிதர்களைப் பார்த்துச்
சிலிர்த்துக் கொண்டது
முள்ளம்பன்றி...
ஓ.. இவர்களுக்குத் தெரியாதா
முள்ளும் ஓர்
ஆயுதம் என்று
–சிற்பி பாலசுப்பிரமணியம்
இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவை எதுவுமில்லாத
கருத்துக்கள் தம்மைத் தாமே
ஆளக் கற்றுக்கொண்ட புதிய
மக்களாட்சி முறையே புதுக்கவிதை
– மு.மேத்தா.(புதுக்கவிதை இலக்கணம் குறித்து புதுக்கவிதை )
இன்று :
பறக்கிறோம் என்பது
பார்வையின் மயக்கம் !
சிறக்கிறோம் என்பதும்
சிந்தனைக் குழப்பம் !
இருக்கிறோம் என்பதே
இயற்கையின் கருணை
வருவதும் போவதும்
வாழ்க்கையின் உயிர்ப்பு !
–ஆரூர் தமிழ்நாடன்
நவீன கவிதை :
+++++++++++++
அன்று:
ரயில் வண்டியின் குலுங்குகிற
ராத்திரி விழிப்பில்
கண்ணாடி ஜன்னல் வலி
கலங்கி தெரிந்தது
நீரற்று ஆற்று மணல் மேல் நிலா.
-------------------------------------
மரணத்திலிருந்து
தாபித்த கண்கள்
மருத்துவமனைக் கட்டிலில்
உறங்க,
கணக்கும் மனதுடன்
நிசியில் வெளிவந்தது நின்ற பொழுது
வேப்பமர கிளைகளுக்கிடையில்
நிலா அசைந்தது.
---------------------------------------------------
தானாக இப்படி
தட்டுப்பட்டது தவிர
நிலா பார்க்க என்று போய்
நிலா பார்த்து நாளாயிற்று.
–கல்யாண்ஜி (வண்ணதாசன்)
இன்று:
ஆதி நதியொன்று
பாய்ந்துகொண்டே இருக்கிறது
அதன் கரையில்தான்
நாம் நிற்கிறோம்.
அதன் அலையில்தான்
நாம் நனைகிறோம்!
.
கூழங்கல்லாய் உருள்கிறது
தொன்மையின்
மாயப் பேரழகு.
.
நம் காலடியிலோ
காலத்தின் வண்டல்.
.
ஆதாம் ஏவாளின்
மரபணுக்கள்தான்
வாழ்வின் கட்டங்களுக்குள்
இப்போதும் நம்மை வைத்து
சதுரங்கம் ஆடுகின்றன.
.
ஆயிரமாயிரம்
ஆண்டுகளின் பின்னும்
நம் ஹார்மோன்கள்
யார் யாரிடமிருந்தோ சுரந்து
அவர்களின்
நடத்தைகளுடன் விளையாடும்.
.
அதுவரை இங்கே
வந்து போய்க்கொண்டிருக்கலாம்
நாம்.
--ஆரூர் தமிழ்நாடன்
புங்கமரத்து நிழல்
படுத்திருந்த நேரம்
வண்டியோடு கட்டப்பட்ட
காளைகள் ஓய்வெடுக்க
காகம் ஒன்று குதித்தபடி
காளையின் கொண்டை
மீதேரியும் இறங்கியபடியும் இருந்தது
பாரம் சுமந்த தளர்ச்சியில்
உறங்கமுடியாது தவித்த
காளையின் வாலும்
காதுகளும் காகத்தை
துரத்தும் முயற்சியில் இருந்தன...
கண்களில் இருந்து வழியும்
கண்ணீர்க் கோடுகள்
மட்டுமே அறியும் காளையின்
ரணம் சுமக்கும்
காயங்களின் வலி .
–கா.ந.கல்யாணசுந்தரம்
சனி, ஜூன் 19, 2021
சனி, மே 01, 2021
ஞாயிறு, ஏப்ரல் 12, 2020
செவ்வந்தி மேலே ஒரு பனித்துளி - நூல் அணிந்துரை - கா.ந.கல்யாணசுந்தரம்
கவியுலகப் பூஞ்சோலை இலக்கியக் குழுமம் தமது ஆண்டுவிழாவில் வெளியிட்ட ஹைக்கூ கவிஞர்களின் தொகுப்பு நூலான " செவ்வந்தி மேலே ஒரு பனித்துளி " நூலுக்கான அணிந்துரை ...











திங்கள், ஏப்ரல் 06, 2020
வேளாண் அறிவியலின் மதிப்புறு முனைவர் நம்மாழ்வார்
அறிவியல் வேளாண்மையில் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தி வாழ்ந்த நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாள் இன்று.
போற்றுவோம் அவரை.
......கா.ந.கல்யாணசுந்தரம்
- மரபுவழி விதையுலகை
அடையாளப் படுத்தியவர்
உழவின் ஆசான் நம்மாழ்வார்
- இயற்கை விவசாயம்
இவரது மூச்சு
நம்மாழ்வார்
- பன்னாட்டு வேளான்மைப்
புரட்சிக்கு வித்திட்டவர்
நம்மாழ்வார்
- இயற்கை உழவாண்மை
பேரிகையின் ஆசிரியர்
நம்மாழ்வார்
- வேளாண் துறையில்
மரபணு சோதனையை எதிர்த்தவர்
நம்மாழ்வார்
- வேளாண் அறிவியலின்
மதிப்புறு முனைவர்
நம்மாழ்வார்
- தமிழின வாழ்வியல்
பல்கலைக்கழகமாய் நடமாடியவர்
நம்மாழ்வார்
......கா.ந.கல்யாணசுந்தரம்

வியாழன், ஏப்ரல் 02, 2020
கவிக்கோ துரை வசந்தராசன் அவர்களின் விமர்சனம்...வெளிச்ச மொழியின் வாசிப்பு
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
நூல் அறிமுகம்
நூல்: வெளிச்ச மொழியின் வாசிப்பு
ஆசிரியர் :கா.ந.கல்யாணசுந்தரம்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
நூல் அறிமுகம்
நூல்: வெளிச்ச மொழியின் வாசிப்பு
ஆசிரியர் :கா.ந.கல்யாணசுந்தரம்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
நாடறிந்த கவிஞர்.!
உலக தமிழ் ஹைக்கூ மன்றத்தின் தலைவர்!
தன்முனைக் கவிஞர்களின் தலைவர்!
கவிதையின் அனைத்து வடிவங்களிலும் பயணிப்பவர்!
கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்கள்.
உலக தமிழ் ஹைக்கூ மன்றத்தின் தலைவர்!
தன்முனைக் கவிஞர்களின் தலைவர்!
கவிதையின் அனைத்து வடிவங்களிலும் பயணிப்பவர்!
கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்கள்.
அவரது புதுக்கவிதைப் புதையலொன்றைச் சமீபத்தில்தான் எனக்களித்தார்.
புதையலைப் பிரித்துப்பார்க்கிற பெரும்வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது.
கிடைத்த புதையலைப் பங்குவைப்பதில் பெருமகிழ்ச்சியெனக்கு.
புதையலைப் பிரித்துப்பார்க்கிற பெரும்வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது.
கிடைத்த புதையலைப் பங்குவைப்பதில் பெருமகிழ்ச்சியெனக்கு.
"வெளிச்சமொழியின் வாசிப்பு "
திறக்கும்போதே மகுடமணிந்து காட்சியளிக்கிறது.என் இனிய நண்பர்
ஆரூர் தமிழ்நாடன் அவர்கள் ஆசையோடு ஆராதித்திருக்கிற அணிந்துரையால்.
திறக்கும்போதே மகுடமணிந்து காட்சியளிக்கிறது.என் இனிய நண்பர்
ஆரூர் தமிழ்நாடன் அவர்கள் ஆசையோடு ஆராதித்திருக்கிற அணிந்துரையால்.
இந்நூல்
புதுக்கவிதையும் நவீனத்துவமும் கலந்த கலவை.
வாழ்வியலோடு நிறைந்த மனிதநேயம் நிரம்பிய கவிதைகளோடு கவிஞரே நம்மோடு பயணிக்கும் அனுபவத்தை உணரவைக்கிறார்.
புதுக்கவிதையும் நவீனத்துவமும் கலந்த கலவை.
வாழ்வியலோடு நிறைந்த மனிதநேயம் நிரம்பிய கவிதைகளோடு கவிஞரே நம்மோடு பயணிக்கும் அனுபவத்தை உணரவைக்கிறார்.
கிராமியத்தின் விழுமியங்களை விரித்துவைக்கிறது.
சமூக அவலங்களுக்கான எதிர்ப்பினை பதிவுசெய்கிறது.
தத்துவ வெளிகளும் தலைகாட்டுகிறது.
முற்றிய இளமையின் முத்தமுற்றத்தை
சத்தியவாக்குகளால் சமைத்துவைத்திருக்கிறது.
*
இது வெற்றியின் முகம்.
இந்நூலில்....கவிஞர்...
தலைப்புகளைக் கவிதைக்குள் வைத்துத்
தேடாமலேயே தலைகாட்ட வைக்கிறார்.
சமூக அவலங்களுக்கான எதிர்ப்பினை பதிவுசெய்கிறது.
தத்துவ வெளிகளும் தலைகாட்டுகிறது.
முற்றிய இளமையின் முத்தமுற்றத்தை
சத்தியவாக்குகளால் சமைத்துவைத்திருக்கிறது.
*
இது வெற்றியின் முகம்.
இந்நூலில்....கவிஞர்...
தலைப்புகளைக் கவிதைக்குள் வைத்துத்
தேடாமலேயே தலைகாட்ட வைக்கிறார்.
*
கிராமத்துத் தடங்களை கவிப்படமாக்கியவர்
"இவையாவும் இருந்தனவென்று
சாட்சி சொல்ல
இன்றும் நிமிர்ந்து நிற்கிறது
என் கிராமத்துச் சுமைதாங்கிக் கல் "
என்று சுமைதாங்கிக்கல்லில் தன் கவிப்படக் கருவியை நிறுத்துகிறார்.
அவர் நிறுத்திய இடத்திலிருந்து நம்மை ஓடவைக்கிறார்.
கிராமத்துத் தடங்களை கவிப்படமாக்கியவர்
"இவையாவும் இருந்தனவென்று
சாட்சி சொல்ல
இன்றும் நிமிர்ந்து நிற்கிறது
என் கிராமத்துச் சுமைதாங்கிக் கல் "
என்று சுமைதாங்கிக்கல்லில் தன் கவிப்படக் கருவியை நிறுத்துகிறார்.
அவர் நிறுத்திய இடத்திலிருந்து நம்மை ஓடவைக்கிறார்.
"மரங்கொத்தியின்
பொந்துக்குள்
கிளைகளின் வாழ்க்கை " என்று
வாழ்வானுபவத்தை விரித்துவைக்கிறவர்
"இரவின் மடியில்
உலகின்
பகல்பொழுது "
என்பதில் நம்மைத் தேடவைக்கிறார்.
பொந்துக்குள்
கிளைகளின் வாழ்க்கை " என்று
வாழ்வானுபவத்தை விரித்துவைக்கிறவர்
"இரவின் மடியில்
உலகின்
பகல்பொழுது "
என்பதில் நம்மைத் தேடவைக்கிறார்.
*
ஒரு நீர்த்தேக்கத்தைப் பார்த்தபடி படம்பிடித்துக்கொண்டே வந்தவர்
. "நீர்த்தேக்கத்தில் எனது
எண்ணப்பறவைகள் மட்டும்
கானல்நீரை அருந்திக்கொண்டிருந்தன"
என்று கவிதையை நிறைவுசெய்கிறார்.
நிறைவுறாத நீர்த்தேக்கத்தில் நம்மை நிறுத்தி வைக்கிறார்.
ஒரு நீர்த்தேக்கத்தைப் பார்த்தபடி படம்பிடித்துக்கொண்டே வந்தவர்
. "நீர்த்தேக்கத்தில் எனது
எண்ணப்பறவைகள் மட்டும்
கானல்நீரை அருந்திக்கொண்டிருந்தன"
என்று கவிதையை நிறைவுசெய்கிறார்.
நிறைவுறாத நீர்த்தேக்கத்தில் நம்மை நிறுத்தி வைக்கிறார்.
*
முதிர்கன்னிகளைப் பேசவந்தவர்,இளைய தலைமுறைக்கு வேண்டுகோள் வைக்கிறார்
முதிர்கன்னியாய் முகமழியும் மகளிருக்காக
'நடக்கமுடியாத நதிகள்
பூகோள நிலப்பரப்பில் வேண்டா!
புதியதோர் உலகு செய்வோம் "
என்று புதிய நெம்புகோல்களுக்குப் புத்தாக்கம் தருகிறார்.
முதிர்கன்னிகளைப் பேசவந்தவர்,இளைய தலைமுறைக்கு வேண்டுகோள் வைக்கிறார்
முதிர்கன்னியாய் முகமழியும் மகளிருக்காக
'நடக்கமுடியாத நதிகள்
பூகோள நிலப்பரப்பில் வேண்டா!
புதியதோர் உலகு செய்வோம் "
என்று புதிய நெம்புகோல்களுக்குப் புத்தாக்கம் தருகிறார்.
*
ஒரு கவிதையில்
"தன்னைத் தேர்ச்சக்கரத்தில்
ஏற்றும்படி காத்திருக்கிறான்
மனுநீதிச் சோழன்
நீதிமன்றத்தில் '
என்று
கழுவில் ஏற்றப்படும் நியாயங்களைக்
காண வைக்கிறார்.
ஒரு கவிதையில்
"தன்னைத் தேர்ச்சக்கரத்தில்
ஏற்றும்படி காத்திருக்கிறான்
மனுநீதிச் சோழன்
நீதிமன்றத்தில் '
என்று
கழுவில் ஏற்றப்படும் நியாயங்களைக்
காண வைக்கிறார்.
*
" அடையாளத்தைத் தொலைத்த
வீட்டருகில்
ஓர் அஞ்சல்பெட்டி
முகவரியைக்
கொடுத்துக்கொண்டிருக்கிறது"
" அடையாளத்தைத் தொலைத்த
வீட்டருகில்
ஓர் அஞ்சல்பெட்டி
முகவரியைக்
கொடுத்துக்கொண்டிருக்கிறது"
இந்தக் முகவரி நம்மை நெடுநேரம் நிற்கவைத்துவிடுகிறது.
*
இப்படி நூறு கவிதைகள்.
நூறு கவிதைகளிலும் நூற்றுக்கணக்கான கவிதைகள்.
இப்படி நூறு கவிதைகள்.
நூறு கவிதைகளிலும் நூற்றுக்கணக்கான கவிதைகள்.
*
சுருங்கக் கூறின்
அணிந்துரையில் தமிழ்நாடன் குறிப்பிட்டிருப்பதுபோல்
கவிச்சுடர் தன் திசைகளை அகலப்படுத்தியிருக்கிறது.
"அண்மைக்காலத்தில் வந்த தொகுப்புகளில் ,செறிந்த கவிதைத் தொகுப்பு என என்னால் எந்தச்சபையிலும் பரிந்துரைக்க முடியும்"
என்று ஆரூர் தமிழ்நாடன் முன்மொழிந்திருப்பதை நான் வழிமொழிகிறேன்.
அனைத்துக் கவிதைகளையும் சொல்ல ஆசைதான்.
அந்த ஆசையை நீங்கள் நூல்வாங்கி நிறைவுசெய்துகொள்ளுங்களேன்.
சுருங்கக் கூறின்
அணிந்துரையில் தமிழ்நாடன் குறிப்பிட்டிருப்பதுபோல்
கவிச்சுடர் தன் திசைகளை அகலப்படுத்தியிருக்கிறது.
"அண்மைக்காலத்தில் வந்த தொகுப்புகளில் ,செறிந்த கவிதைத் தொகுப்பு என என்னால் எந்தச்சபையிலும் பரிந்துரைக்க முடியும்"
என்று ஆரூர் தமிழ்நாடன் முன்மொழிந்திருப்பதை நான் வழிமொழிகிறேன்.
அனைத்துக் கவிதைகளையும் சொல்ல ஆசைதான்.
அந்த ஆசையை நீங்கள் நூல்வாங்கி நிறைவுசெய்துகொள்ளுங்களேன்.
*
இந்நூலை
கவிஓவியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
மயிலாடுதுறை இளையபாரதியின் நேர்த்தியான வடிவமைப்பு எப்போதும்போல் இப்போதும் சிறப்பு !
வெல்க !
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
கவிஓவியா வெளியீடு
68/21,திருவள்ளுவர் தெரு
அன்பழகன் நகர்,செம்பியம்,சென்னை --11
எண் :9840912010
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
இந்நூலை
கவிஓவியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
மயிலாடுதுறை இளையபாரதியின் நேர்த்தியான வடிவமைப்பு எப்போதும்போல் இப்போதும் சிறப்பு !
வெல்க !
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
கவிஓவியா வெளியீடு
68/21,திருவள்ளுவர் தெரு
அன்பழகன் நகர்,செம்பியம்,சென்னை --11
எண் :9840912010
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷


144...
144....
+++++++++++++++++++++++
+++++++++++++++++++++++
* உதிர்ந்த சருகு
மிதிபடவில்லை சாலையில்
ஊரடங்கு உத்தரவு
மிதிபடவில்லை சாலையில்
ஊரடங்கு உத்தரவு
* வாலாட்டியபடி
தெருவில் நாய்
உணவிடுவோர் காணவில்லை
தெருவில் நாய்
உணவிடுவோர் காணவில்லை
* தார்ச்சாலைகள் முழுக்க
கானல் நீர் பாய்கிறது
தண்ணீர் தேடும் ஏழை
கானல் நீர் பாய்கிறது
தண்ணீர் தேடும் ஏழை
* சாலையோரம் ஓய்வில்
பாரம் சுமந்த வண்டிகள்
சோகம் சுமக்கும் தொழிலாளி
பாரம் சுமந்த வண்டிகள்
சோகம் சுமக்கும் தொழிலாளி
* யாரும் வரவில்லை
பட்டினியோடு ஜோதிடன்
விடுதலையில் கிளிகள்
பட்டினியோடு ஜோதிடன்
விடுதலையில் கிளிகள்
* பீதியில் வெளுத்த முகம்
பசித்த வயிறு
சலவைத் தொழிலாளி
பசித்த வயிறு
சலவைத் தொழிலாளி
............கா.ந.கல்யாணசுந்தரம்

வெள்ளைக் குதிரை கிடைக்கவில்லை ?
காலத்தின் வயதில் யுகங்கள்
எல்லைகளைக் கொண்டுள்ளது...
கலியுகமே...நீ
வயதின் களங்கமா?
உன்னோடு சாத்தான்கள்
உலா வருகின்றனவே !
கலியுகத்தின் தொடக்கத்தில்
அந்த மாயக்கண்ணன்
அவதரித்தானா ?
எங்களின் முதல் கணிதவியல்
மேதாவி ஆர்யபட்டா
கலியுகத்தின் தொடக்கத்தில்
கோள்கள் இடம்பெயர்ந்த
அதிசயத்தைக் கூறினார் !
இது மொஹஞ்சதாரா கல்வெட்டின்
சாட்சியம் எனக் கூறுகிறார்கள்..!
எல்லைகளைக் கொண்டுள்ளது...
கலியுகமே...நீ
வயதின் களங்கமா?
உன்னோடு சாத்தான்கள்
உலா வருகின்றனவே !
கலியுகத்தின் தொடக்கத்தில்
அந்த மாயக்கண்ணன்
அவதரித்தானா ?
எங்களின் முதல் கணிதவியல்
மேதாவி ஆர்யபட்டா
கலியுகத்தின் தொடக்கத்தில்
கோள்கள் இடம்பெயர்ந்த
அதிசயத்தைக் கூறினார் !
இது மொஹஞ்சதாரா கல்வெட்டின்
சாட்சியம் எனக் கூறுகிறார்கள்..!
கலியுகத்தில் அதர்மம் தழைக்க
விவேகமழிந்தோர் அறிவியலை
அழிவுக்கே பயன்படுத்துகிறார்கள் !
ஆதிக்க சக்திகள்
தனிமனிதனை ஒரு கிராமத்தை
நகரத்தை….ஏன் ஒரு நாட்டையே
துண்டாட வைக்கிறது!
மருத்துவமில்லா நோய்களைப் பரப்பி
மனிதத்தை வீழ்த்துகிறது !
மலையிலிருந்து உருளும்
பாறைபோல் மக்கள்
நற்குணமிழந்து நலமிழக்கிறார்கள் !
இறைவா..உனக்கு இன்னுமா
வெள்ளைக் குதிரை கிடைக்கவில்லை ?
கொரோனா உயிர்க்கொல்லி
உலகையே அழிக்கிறதே….
கலியுகத்தின் கணக்கு முடியவில்லையா?
மௌனம் களைந்து மீட்டெடு...
அபயக் குரல்கள்
வானைப் பிளப்பதற்குள் வந்துவிடு !
விவேகமழிந்தோர் அறிவியலை
அழிவுக்கே பயன்படுத்துகிறார்கள் !
ஆதிக்க சக்திகள்
தனிமனிதனை ஒரு கிராமத்தை
நகரத்தை….ஏன் ஒரு நாட்டையே
துண்டாட வைக்கிறது!
மருத்துவமில்லா நோய்களைப் பரப்பி
மனிதத்தை வீழ்த்துகிறது !
மலையிலிருந்து உருளும்
பாறைபோல் மக்கள்
நற்குணமிழந்து நலமிழக்கிறார்கள் !
இறைவா..உனக்கு இன்னுமா
வெள்ளைக் குதிரை கிடைக்கவில்லை ?
கொரோனா உயிர்க்கொல்லி
உலகையே அழிக்கிறதே….
கலியுகத்தின் கணக்கு முடியவில்லையா?
மௌனம் களைந்து மீட்டெடு...
அபயக் குரல்கள்
வானைப் பிளப்பதற்குள் வந்துவிடு !
………..கா. ந. கல்யாணசுந்தரம்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)