கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், ஜூன் 09, 2015

இன்பம் பருகும் வாழ்நாட்கள் !









இசையுலகின் இணையிலா மேதை !
இறைவனின் இசை அவதாரம் !
இயற்கையின் இதயத்தை தொட்டவன் !
இயல்பின் வெளிப்பாடுகளில்
இமயத்தை முத்தமிட்டவன் !
இலங்கும் புவிமீது இசையின்
இலக்கணத்தை வடித்தவன் !
இன்றல்ல நேற்றல்ல என்றும்
இசையுலகின் சக்கரவர்த்தி !
இளையராஜா - எங்களின்
இதயம்கவர் கள்வன் !
இந்தியத்தாய் பெற்றெடுத்த
இணையிலா தவப்புதல்வன்
இன்னும் இன்னும் வேண்டும்
இவனின் இசை கேட்டு
இன்பம் பருகும் வாழ்நாட்கள் !

............கா.ந.கல்யாணசுந்தரம்.

2 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா !
    இசைச் சக்கரவர்த்திக்கு ஓர் இனிமையான பாமாலை சூடி விட்டீர்கள் !
    அருமை !அருமை !வாழ்த்துக்கள் மென்மேலும் தொடருங்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தங்களுக்கு. தங்களின் நலன் விசாரிப்பில் .....
      அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.

      நீக்கு