கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், ஜனவரி 04, 2012

நெஞ்சைத் தொடும் கவிதைகள்.....











இசை அறியா உள்ளத்தையும்

செயலிழக்கச் செய்கிறது...

கொலுசுச் சத்தம்!


காய்க்க முடியாது தவிக்கும்

காகிதப் பூக்களாய்...

விலை மகளிர்!


என்றும் பசுமையாய்

நினைவில் நிற்கிறது...

பாடசாலை அனுபவங்கள்!


இனியவை பேசி

இன்னல் அகற்றுதல்...

மனிதநேயத்தின் அஸ்திவாரம்!


புரட்டிப் பார்ப்பதைவிட

என்னை படித்துப்பாருங்கள்...

ஏங்கிடும் புத்தகங்கள்!


............கா.ந.கல்யாணசுந்தரம்.








4 கருத்துகள்:

  1. முதல் முறை பார்த்தேன்
    முழுவதும் பார்த்த பின்பு என்
    முகவுரையை சொல்கிறேன்

    தி ப ஜனார்த்தனன்

    பதிலளிநீக்கு
  2. புரட்டிப் பார்ப்பதைவிட

    என்னை படித்துப்பாருங்கள்...

    ஏங்கிடும் புத்தகங்கள்!

    அருமை

    பதிலளிநீக்கு
  3. ஓசூர் ராஜன், ஜனா மற்றும் சசிகலா அவர்களுக்கு எனது நன்றி.

    பதிலளிநீக்கு