கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், செப்டம்பர் 26, 2011

நெஞ்சமதைத் தழுவும் வரை




இதயத்தை ஒருமுறை
கேட்டுக்கொள்கிறான் ...
வெடித்துவிடாமல்
வாழவேண்டுமென்று....
பாசம் நேசமெல்லாம்
பங்குபோட்டு
பாதியிலே ஒதுங்கிவிடும்!
உறவுகளின் ஒப்பாரியில்
ஓரங்க நாடகங்கள்
இடையிடையே அரங்கேறும்!
நட்பு வட்டங்கள்
அஞ்சலிக்கு ஆள் சேர்க்கும்!
கரும்பலகையில் கல்வி
கற்றதெல்லாம்
கல்லறை வரைக்கும்
கொண்டுசெல்லும்!
இருந்தாலும் .....
மீண்டும் மீண்டும்
கேட்டுக்கொள்கிறான்
இதயத்திடம்....
'வெடித்துவிடாதே
நினைவுக் கூடே...!
சற்றேனும் காத்திரு
சிநேகத்தின் சுவாசத்தை
மொத்தமாய் ஆளுகின்ற
என்னவளின் மூச்சுக்காற்று
நெஞ்சமதைத் தழுவும் வரை!'

....கா.ந.கல்யாணசுந்தரம்


5 கருத்துகள்:

  1. ரெம்ப அருமையான கவிதை
    கவிஞரின் வரிகளுக்கு சல்யூட்

    பதிலளிநீக்கு
  2. ///கரும்பலகையில் கல்வி
    கற்றதெல்லாம்
    கல்லறை வரைக்கும்
    கொண்டுசெல்லும்!///

    சத்தியமான வார்த்தைகள் நண்பரே..
    கற்ற கல்வி ஒன்றே இறுதிவரை கூட வரும்.
    அழகிய கவிதை.

    பதிலளிநீக்கு
  3. செயதாலி. சௌந்தர் மற்றும் மகேந்திரன் அவர்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. //கரும்பலகையில் கல்வி
    கற்றதெல்லாம்
    கல்லறை வரைக்கும்
    கொண்டுசெல்லும்//

    ஆம்! சகோ
    உண்மைதான்!
    கற்ற கல்விச் செல்வம் தான்
    கல்லறை வரை வரும்
    கருத்தமைந்த கவிதை!

    த.ஓ.2

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு