கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், செப்டம்பர் 27, 2011

பாச வலைகள்....


உலகம் ஒரு மாயை என்று
சொல்வதை அறிவியல் ஆமோதிக்காது!
விதி என்பது விதிக்கப்பட்ட
ஒரு அமானுஷ்யம்........
என ஒப்புக்கொள்ளாத மானுடம்
அதர்மத்திடம் உறவுகொள்கிறது!
செயல்பாடுகள் என்றுமே
அவரவர் ஜனித்த நட்சத்திர
ராசி பலன்களால்தான்
என்றெல்லாம் கூறுவதை
பலநேரங்களில் நம்பத்தான்
வேண்டியிருக்கிறது!
மனிதத்தின் பலவீனங்கள்
பலவாறு கூறுபோட்டு பார்க்க
மனிதமே முயலுகிறது!
ஆளுமை எண்ணங்கள் தலைப்படும்போது...
மனசாட்சி ஏனோ அரசாட்சி செய்வதில்லை!
இன்னொரு பிறப்பின் ரகசியம்
என்னவென்று அறியாத
தூண்டில் மீன்களாய் மனிதவாழ்க்கை!
இருப்பினும்......
ஆசை எனும் வாழ்க்கை கடலில்
உறவுத் தோணிகள்
இன்றும் சுமக்கின்றன...
பாச வலைகளை!


.........கா.ந.கல்யாணசுந்தரம்.

2 கருத்துகள்:

  1. //ஆளுமை எண்ணங்கள் தலைப்படும்போது...
    மனசாட்சி ஏனோ அரசாட்சி செய்வதில்லை!//

    அங்கே மனசாட்சி ஆட்சி செய்துவிட்டால்
    பணிவும் அடக்கமும் தானாக வந்துவிடுமே..

    ///இன்னொரு பிறப்பின் ரகசியம்
    என்னவென்று அறியாத
    தூண்டில் மீன்களாய் மனிதவாழ்க்கை!///

    அழகிய வாழ்வியல் வரிகள் நண்பரே...
    கவிதை நன்று.

    பதிலளிநீக்கு
  2. தங்களின் சிறப்பு விமர்சனத்துக்கு எனது நன்றிகள் ஆயிரம்

    பதிலளிநீக்கு