கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், செப்டம்பர் 06, 2011

பேசத்தெரியாத குழந்தை


குழந்தை வீரிட்டு அழுத சப்தம்
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை
ஓடி வந்து கேட்க வைத்தது....
'அடியே பொன்னம்மா....ஏண்டி
கொழந்தய இப்படி அடிக்குற? '
கையில் கிடைத்ததைக் கொண்டு
குழந்தையை அடித்தவள் இப்போது
வாரியணைத்தபடி சொன்னாள்....
'பின்ன என்னாக்கா....பத்து பாத்திரம்
தேச்சு வாங்கின சம்பளத்துல
புது சட்டை வாங்கி போட்டா...அத
தொலைச்சிட்டு வந்து நிக்கரா...
அடிச்சாலும் பதிலு இல்ல...'
பொனம்மாவின் குமுரலுக்கு
பேசத்தெரியாத குழந்தை
மனதோடு தேற்றிக் கொண்டது...
'என்னோட புதிய துணி

பக்கத்து வீட்டு கொழந்தையோட
மரப்பாச்சிக்கு கட்டிட்டேன்....
எவ்வளவு அழகா
இருக்கு தெரியுமா?' .


கா.ந.கல்யாணசுந்தரம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக