கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வியாழன், செப்டம்பர் 22, 2011

எழிலார்ந்த ஓவியம்


மாலையின் வரவுக்காக
மணிக்கணக்காய் தவமிருக்கிறேன்...
காரணம்....
பொன்னிற மஞ்சள் வெயிலில்
மயங்கும் நதிக்கரை
தென்னங் கீற்றுகள்!
இறைவன் தினம் தினம்
உயிர்த்துடிப்பாய் வரைகின்ற
இயற்கையெனும் இளையகன்னியின்
எழிலார்ந்த ஓவியம்!
சுருங்கச் சொன்னால்...
நான் இன்னும் உயிரோடிருப்பது
உங்களின் இனிய தோற்றங்களால்!

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக