கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், அக்டோபர் 19, 2022

துளிர்த்தலின் காலத்தினை எதிர்நோக்கி!


உதிர்க்கும் முன்
வண்ணங்களைப்
போர்த்திக் கொள்கின்றன...
நிறம் மாறாத பூக்கள் இருக்க
நிறம் மாறும் இலைகள்!
வெண்பனி கொட்டும்முன்
எங்களுக்கு
வண்ணமிகு காட்சி தந்து
மகிழ்வளிக்கும் மரங்கள்!
இலையுதிர்காலம்
இனிதாய் வரவேற்கிறோம்
துளிர்த்தலின் காலத்தினை
எதிர்நோக்கி!

...... கா. ந. கல்யாணசுந்தரம்.


செவ்வாய், ஜூலை 05, 2022

கம்பன் கவிநயம்

 








அறிவியல் தகடுகள்

இருள் முடிச்சு அவிழ வெளிச்ச ஊடுருவலில் கொள்ளைபோகும் காலம் மீட்டெடுக்க முடியாது தவிக்கின்ற மனிதம் அடுத்த நகர்வுக்கு தயாராகிறது அவ்வப்போது காலக்கண்ணாடி உடைக்கப்பட்டு எவ்வித பிரதிபலிப்புமின்றி வெற்றுச் சலனங்கள் அரங்கேறுகின்றன வரலாற்றுப் பதிவுகளில் அச்சு முறிந்த சூட்சுமத்தில் பயணித்திருக்கிறது வெற்றியாளர்களின் சாகசங்கள் சுவடுகள் தேய்ந்து வர புதுப்பித்து வருகின்றன அறிவியல் தகடுகள் ......கா.ந.கல்யாணசுந்தரம்

......கா.ந.கல்யாணசுந்தரம்

தடைக்காலம்