இருள் முடிச்சு அவிழ வெளிச்ச ஊடுருவலில் கொள்ளைபோகும் காலம் மீட்டெடுக்க முடியாது தவிக்கின்ற மனிதம் அடுத்த நகர்வுக்கு தயாராகிறது அவ்வப்போது காலக்கண்ணாடி உடைக்கப்பட்டு எவ்வித பிரதிபலிப்புமின்றி வெற்றுச் சலனங்கள் அரங்கேறுகின்றன வரலாற்றுப் பதிவுகளில் அச்சு முறிந்த சூட்சுமத்தில் பயணித்திருக்கிறது வெற்றியாளர்களின் சாகசங்கள் சுவடுகள் தேய்ந்து வர புதுப்பித்து வருகின்றன அறிவியல் தகடுகள் ......கா.ந.கல்யாணசுந்தரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக