கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

சனி, செப்டம்பர் 03, 2011

மயிலிறகு கொடுத்து

உன்வீட்டு பரணையில்
ஒன்பதாவது வகுப்பு
கட்டுரை நோட்டுப் புத்தகத்தை
நன்றாகப் பார்த்தாயா?
எனக்கு உன் மேல் ஒரு
இனம்புரியாத நேசம் வந்தபோது
மயிலிறகு கொடுத்து
அதற்காக உன்னிடம்....
பென்சில் கடனாக வாங்கியது
இன்றும் இருக்கிறது!
கட்டுரையை படிக்கிறாயோ
இல்லையோ,
புத்தகத்தை புறட்டியாவது பார்
அந்த நாள் நினைவுக்காக!

........கா.ந.கல்யாணசுந்தரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக