சனி, ஜூன் 13, 2015
செவ்வாய், ஜூன் 09, 2015
இன்பம் பருகும் வாழ்நாட்கள் !
இசையுலகின் இணையிலா மேதை !
இறைவனின் இசை அவதாரம் !
இயற்கையின் இதயத்தை தொட்டவன் !
இயல்பின் வெளிப்பாடுகளில்
இமயத்தை முத்தமிட்டவன் !
இலங்கும் புவிமீது இசையின்
இலக்கணத்தை வடித்தவன் !
இன்றல்ல நேற்றல்ல என்றும்
இசையுலகின் சக்கரவர்த்தி !
இளையராஜா - எங்களின்
இதயம்கவர் கள்வன் !
இந்தியத்தாய் பெற்றெடுத்த
இணையிலா தவப்புதல்வன்
இன்னும் இன்னும் வேண்டும்
இவனின் இசை கேட்டு
இன்பம் பருகும் வாழ்நாட்கள் !
............கா.ந.கல்யாணசுந்தரம்.
திங்கள், ஜூன் 08, 2015
எனது எண்ண ஓட்டங்களாக பகிரப்பட்டவை......
![]() |
தலைப்பைச் சேருங்கள் |
படுத்து உறங்காமல்
இளைப்பாற வாருங்கள்...நிழல்தரும் மரங்கள் !
முத்தமிட வா....
கோடை மழையே !
குடைபிடித்தன....
கரு மேகங்கள் !
நல்லிசை வழங்கின...
வண்டு துளைத்த மூங்கில்கள் !
ஒரு மௌனித்த பயணம் ...
நேற்றைய உதிர்தல் !
........கா.ந.கல்யாணசுந்தரம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)