கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், செப்டம்பர் 09, 2013

அன்பின் வழியது உயிர்நிலைதான் என்றாலும்
ஆழ்கடலின் நங்கூரமாய் மனது !
இயல்பின் வெளிப்பாடாய் இயக்கம் அமைந்தாலும்
ஈன்ற அன்னைக்கு ஈடில்லை உலகில் !
உண்மை ஒளிரும் எப்போதும் என்றாலும்
ஊமை மொழி அறிவது எக்கணம்?
எண்  சாண்  உடலுக்கு சிரசே பிரதானம்
ஏற்றமிகு வாழ்விற்கு பணமே அரியாசனம்
ஐம்பொன் சிலைக்கு பாலாபிஷேகம்
ஒரு ஏழைச் சிறுமிக்கு பாலியல் வன்மம்
ஓடி ஒளிந்த தமிழின ஈழம்
ஔடதமாய் எந்நாளில் கிட்டும்?

......கா.ந.கல்யாணசுந்தரம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக