அது ஒரு வசந்த காலம்
மேக மூட்டம் பகலை
இருளாக்கியது.....
பெருமழை பெயதலின்
முன்னோடியாய்
மின்னல் வெட்டும் இடியும்...
பள்ளிக்கூடத்தின் மணி
அடிக்கப்பட்டது....
புற்றீசலாய் வகுப்பிலிருந்து
பறந்து சென்றோம்
வீட்டுக்கு....!
சுவையான கேழ்வரகு அடை
அம்மாவின் கைவண்ணத்தில்
மணம் தவழ
அழைத்தது வீட்டின் வாயில் !
தூறல் ஆரம்பித்தது.....
மழைக்கு இதமாய்
அடையை காகிதப்பைகளில்
அடைத்து வைத்துக்கொண்டு
திண்ணையில் உட்கார்ந்து
சுவைத்தவரே தயாரானது
எங்களின் காகிதக் கப்பல்கள்....!
அக்கம் பக்கம் நட்புகளுடன்
தெருவில் அணைகட்டி
திறந்துவிட்டோம்
வெள்ளத்தை ....
வெள்ள நீரில் பயணித்தன
காகிதக் கப்பல்கள் .........
மனிதநேயத்தின்
அறிச்சுவடுகளாய்....!
ஆம்...அது ஒரு வசந்த காலம் !!!!!!
.....கா.ந.கல்யாணசுந்தரம்.
வசந்தம் புது சுவாசம் கொடுக்கிறது....
பதிலளிநீக்குதங்களின் கருத்து உண்மையே. நன்றி.
நீக்கு//சுவையான கேழ்வரகு அடை
பதிலளிநீக்குஅம்மாவின் கைவண்ணத்தில்
மணம் தவழ
அழைத்தது வீட்டின் வாயில்!..//
அருமை.. உண்மையில் அது ஒரு வசந்த காலம் தான்!..
வசந்தகாலத்தை உணர்த்தும் வரிகளை பாராட்டியமைக்கு மனமார்ந்த நன்றி.
நீக்கு