கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், செப்டம்பர் 06, 2011

அவனுக்கு முடிந்தது...


காற்றுக்கு வேலி போட
முடியவில்லை!
கடலை சொந்தம் கொண்டாட
முடியவில்லை!
மழையினை கயிறாக கொண்டு
வானத்தை தொட முடியவில்லை!
விண்மீன்களை எண்ணிவிட
ஒருபோதும் முடியவில்லை!
வானவில்லுக்கு ஒரு மேடை
அமைத்திட முடியவில்லை!
கொட்டும் அருவிக்குள்
குடை பிடிக்க முடியவில்லை!
வெள்ளைநிற பட்டாம்பூச்சிக்கு
வண்ணம் தீட்ட முடியவில்லை!
ஆனால் அவனுக்கு முடிந்தது...
ஒரு பாலைவனமான பருவத்துக்கு
பொட்டு வைத்து பூச்சூட்டி
வசந்த காலத்தை வரவேற்க!

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

3 கருத்துகள்:

  1. ஆஹா, அருமை...
    எளிமையானதெல்லாம் செய்ய இயலாதனவாக இருந்த போது, அவனின் இமாலயச் செயலுக்கு காரணம் யாதென்று அவனின் இதயம் நோக்கினால் அங்கே காதல் என்னும் புனிதக் கன்னியவள் தான் நடனம் புரிவாள்...
    அற்புதம். அருமை.
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. காதல் சாதனையின் உச்சத்தைத் தொட்டுவிட்டது .
    அருமை!... வாழ்த்துக்கள் சகோ .நன்றி பகிர்வுக்கு ...........

    பதிலளிநீக்கு