கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வெள்ளி, செப்டம்பர் 23, 2011

அப்போதே தன்னுள்....


வாழ்க்கை சிகரத்தின்
ஒவ்வொரு படியிலும்
நினைத்துப் பார்க்கிறேன்....
வியந்து நினைக்கிறேன்!
அகரம் பயில ....
துணையாய் நின்ற
தகரப் பலகையின்
கருமை வண்ணத்தை!
அப்போதே தன்னுள்
அடக்கமாய் ஒளித்து
வைத்திருந்த ஒளிமயமான
என்னுடய எதிர்காலத்தை!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

4 கருத்துகள்:

  1. பசுமைமாறாத நினைவுகள்....
    அழகிய கவிதைகளில்...
    அருமை...

    பதிலளிநீக்கு
  2. மரத்தில் அடித்த ஆணி போல ஒட்டிக்கொண்டது கவிதை.

    பதிலளிநீக்கு
  3. அகரப் பலகையின் ஆழத்தை மிக உயரத்தில் கண்ட கவிஞரே! அருமை உமது நன்றியுணர்வு..

    பதிலளிநீக்கு
  4. நன்றி மகேந்திரன், சௌந்தர், தமிழ் விரும்பி மற்றும் பின்னூட்டம் அளித்தவர்களுக்கு.

    பதிலளிநீக்கு