கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வெள்ளி, டிசம்பர் 02, 2011

ஒரு குடு குடுப்பை சத்தம்......












குடு குடுப்பை சத்தத்தினை
பகலில் கேட்டபோது
இரவில் தந்த பயத்தினை
பறித்துப்போட்டது!
'நல்ல காலம் பொறக்குது தாயி......
இந்த வூட்டு எஜமானனுக்கு
ஒரு கண்டம் இருக்குது தாயி....
தண்ணிலகண்டமுன்னு நான் சொல்லல....
உங்க வூட்டு குலதெய்வம் சொல்றா தாயி ......
பூவாடகாரிக்கு பூஜை போடுங்க தாயி.....
வர கண்டம் வராம போயிடும் தாயி.....'
இப்படி விடியலில்
சொன்ன வார்த்தைக்கு
விடைதேடும் படலத்தில்
கணவருடன் சிந்திக்கும் வேளையில்.....
அதே கோடாங்கி பூம் பூம் மாட்டுடன்
ஒரு நாதஸ்வர இசையுடன் வீட்டு வாயிலில்.....
' அம்மா ஒரு கிழிஞ்ச துணி ....
சட்ட துணி கொண்டுங்கம்மா...
இந்த ஏழை கோடாங்கிக்கு குளுருதும்மா....'
என்று கேட்ட கோடாங்கியிடம் ....
'ஏம்பா குடு குடுப்பை
விடியற் காலைல வீட்டுமுன்னாடி
நடக்கப்போறத எப்படி சொன்ன? ----
என்று கேட்கும்போதே ....
' அம்மா தாயி எந்த வீட்டு முன்னாடி
என்ன சொன்னேன்னு
எனக்கே தெரியாதும்மா.....
இதெல்லாம் உங்க ஆத்தா சொல்றது!'
என்று சொல்லிக்கொண்டே
அடுத்த வீட்டின் முன்
நாதஸ்வரம் வாசிக்க தொடங்கினான்....
குலதெய்வம் கோயில் செல்ல
என் கணவர் ஏற்பாடுகளை செய்தபடி
பூவாடைக்காரிக்கு புதுப்புடவை ஒன்றை
எடுக்கவேண்டும் என்றும்
சொல்லிக்கொண்டார்.......
ஆனால் ஒரு கிழிந்த சட்டைகூட
வாங்காமல் சென்ற
அந்த குடு குடுப்பைக்காரனை நினைத்தபடியே
என் மனது மட்டும் ஊஞ்சலாடியது.....!

...........கா.ந.கல்யாணசுந்தரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக