வணிகக்கல்வி வாழ்வினை உயர்த்தும் 
கல்வியில் வணிகம் மனிதத்தை வீழ்த்தும் 
தாய்மொழிக் கல்வி தரத்தினை பெருக்கும் 
அயல்மொழி கற்றிட அடித்தளம் அமைக்கும் 
செம்மொழி தமிழின் இலக்கிய மாண்பு 
சிந்தனை வளத்தின் இயற்கை ஊற்று
புலமை பெற்றிட்ட முன்னோரெல்லாம்
பன்மொழி பயின்று மேதைகளானார்
ஆங்கிலம் பயிலும் அரும்புகளிடத்து 
அம்மா எனும் சொல் அற்புதமானது 
அளவுக்கு மீறிய புத்தக சுமையில் 
அமுத மொழியோ புதைந்து போனது 
உலகின் தொன்மை தமிழில் உண்டு 
உண்மை இதுவென அனைவரும் அறிவர்
பெற்றோர் நாளும் தமிழினை பகன்றால்
புதிய தலைமுறை அணியும் மகுடம் 
.................கா.ந.கல்யாணசுந்தரம்.

 
 
சிறப்பான கவிதை ஐயா...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
நன்றி தனபாலன் அவர்களே. தங்களின் இணய சேவை மகத்தானது.
பதிலளிநீக்குஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்!
வலைச்சர தள இணைப்பு : கல்வி எது? - கரைத்துக் குடிப்பதுவா? கற்று உணர்வதுவா?
அமுத மொழி புதையாது காப்பது நம் கடமை...
பதிலளிநீக்குநல்ல பதிவு..
வலைச்சரம் மூலம் வந்தேன்..