கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

சனி, ஆகஸ்ட் 05, 2017

இதுதான் கார் காலமோ ?

மின்னல் வெட்டிய பொழுதில்
மழைச் சாரல் !
துளிர்த்தலும் உதிர்தலும்
அன்றாட நிகழ்வுகள் ....
தெருவெங்கும் செந்நிற இலைகளால் 
ஒரு சிவப்புக் கம்பள வரவேற்பு !
நீ...நடந்த பாதைகளில்
உதிர்த்த புனகைக் கோட்டின் எல்லைகளில்...
தவம் செய்யும் புல்லின் பனித்துளிகள் !
ஒன்றிரண்டு நனைந்த பறவைகள்
சிறகு விரித்தலில் சிந்தும்
மழைத் துளிகள் ...
இதுதான் கார் காலமோ ?
மங்கிய மாலைப் பொழுதில்
மேற்கு திசை வானம்
கவிழ்ந்து கிடக்கிறது !
மேகங்களைச் சுமந்தபடி
கிழக்கிலிருந்து புறப்பட்ட
ஈரமற்ற உனது குடைக்குள்
இறக்கத்துடன்
ஒரு இதயம் பயணிக்கிறது.....
யாருக்கும் தெரியாமல் !
திண்ணையில் அந்தக் குடையை
மடக்கி வைக்காதே....
அது மரணித்துவிடும் !
...........கா.ந.கல்யாணசுந்தரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக