கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், ஆகஸ்ட் 29, 2011

பூவாக உனை சுமக்க

புன்னை மர நிழலில்
தென்றல் துணையோடு
பிள்ளைக்கு தாலாட்டு!
தண்ணீர் தேக்கிவைத்த
வயக்காடு பரப்பினில்
நெல்நாத்துக் கட்டோடு
தாயவளின் பெரும்பாடு!

உச்சி வெயில் தணலாகி
உடம்பெல்லாம் வியர்க்க
பச்ச புள்ள செவ்வாய்க்கு
பால் புகட்டும் நேரமிது!
மார்பிரண்டும் பெரும்பாரம்
பிடிக்காத சுமையிதுவே!
பூவாக உனை சுமக்க
உள்ளமிது குதூகலிக்கும்!
குடைபிடித்து நிர்க்கின்ற
முதலாளி கெடுபிடியில்
நாற்று நாடும் கையிரண்டும்
குழந்தையின் நேசமிகு
உணர்வுகளில் நடுநடுங்க....
மங்கையவள் மாராப்பு
மழலைவாய் தீண்டாமல்
பால்வடிந்து நனைந்ததம்மா!
பாவியவள் அடிவயிற்றை
நனைக்கின்ற தேடலிலே!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக