கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், நவம்பர் 23, 2011

எப்போது கிடைக்கும்?















பயணிக்கும்போது ஆன்மாவின்
இருப்பிடம் தூய்மையாகிறது!
அன்பை வெளிப்படுத்தி
அமைதியின் பிறப்பிடம் நோக்கி
பழகிய காலங்கள்
இன்பக் கேணியாய்
நெஞ்சில் பிரவாகமாகிறது!
துன்பத்தை பிறரிடம்
பகிர்ந்துகொள்ளும் போது
ஆறுதலான வரைபடம்
மனதில் உருவாகிறது!
எண்ணத்தூரிகைகளே .........
உங்களுக்கு ஒரு
சரியான ஓவியன்
எப்போது வருவான்?
என்னிடம் அலைபாயும்
எண்ணங்களின் வண்ணங்கள்
உள்ளக் கிண்ணங்களில்
நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றன....
வீணாகிப்போனாலும் பரவாயில்லை !
ஒரு நல்ல ஓவியம்
எப்போது கிடைக்கும்?

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

3 கருத்துகள்:

  1. ///////அமைதியின் பிறப்பிடம் நோக்கி

    பயணிக்கும்போது ஆன்மாவின்

    இருப்பிடம் தூய்மையாகிறது!
    ///////


    வாழ்க்கை சொல்லும் வரிகள்...


    அழகிய கவிதை வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. தேடுகையிலும் முயற்சிக்ககையிலும் கிடைத்துவிடுகிறது எலல்ாம்...

    பதிலளிநீக்கு
  3. நன்றி கவிதைவீதி சௌந்தர் அவர்களே.

    பதிலளிநீக்கு