கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வியாழன், செப்டம்பர் 22, 2011

இத்தரையில் பெற்ற சுகம்...





















உனது மென்மையான
விரல் நுனிகளில்
அந்த வயலின்
பிரசவிக்கும்
இன்ப நாதங்கள்....
ஒரு குளிர்கால
முன்பனி காலத்தில்
பூத்துக் குலுங்கும்
செந்தூரப் பூக்களின்
அலாதியான வாசம்...
இரவும் பகலும்
சந்திக்கும் அந்த
அந்திசாயும் நேரத்து
பறவைகள் சங்கமிக்கும்
சலசலப்பு ஓசை!
இரவு நேரத்து
அமைதியின் மடியில்
குழந்தையை தூங்கவைக்கும்
ஒரு தாயின் தூரத்து
தாலாட்டுப் பாடல்.....
இறைவா....
இத்துணை மனிதநேயமிக்க
உறவுகளின் மேன்மயை
அதன் புனிதத்தை
அறியவைத்தாயே...
தாயே...இத்தறையில்
இப்பிறப்பு பெற்றசுகம்
இனிதானதென்று
இயம்பிட இன்று நீயில்லை!
உன் கைப்பிடித்து
உலாவிய நாட்களுக்கு
இனிதான நிகழ்வுகளை
காணிக்கையாக்குகிறேன்!

...கா.ந.கல்யாணசுந்தரம்.




4 கருத்துகள்:

  1. மனதை வருடிச் செல்லும் வரிகள்
    கவிஞரே பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  2. உறவுகளின் புனிதத்தை உணரச் செய்யும்
    அற்புதமான வார்த்தைகள்
    அருமை.

    தமிழ்மணம் 1

    பதிலளிநீக்கு
  3. நண்பரே
    உங்களிடம் ஒரு வேண்டுகோள்
    கருத்திடும் போது கேட்கும் உறுதிப்படுத்தவும்
    என்ற எழுத்து மாயையை போக்கிவிடுங்கள்.
    அது இங்கே கருத்திடுவோருக்கு
    இயைபாக இருக்கும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அருமை கவிஞரே. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு