@ மன ஏரியில் முகிழ்த்து
அடிக்கடி உடைந்துபோகிறது
எண்ணக் குமிழ்கள்
@ மழை வெள்ளத்தில் மிதக்கும்
நீர்க்குமிழி பயணத்தில்....
நிலைத்திருக்கிறது மானுட வாழ்வு!
@ உடையும் மழை வெள்ள
நீர்க்குமிழி உடையும் போது....
உடன் அழுகிறது மழலை !
@ குளத்து நீரில் மிதக்கும்
தாமரை இலைகளின் வரவுகள்
ஒட்டாத நீர்த்துளிகள்!
@ காகித கப்பல்களின் பயணத்தில்
மழை நீர் ஓடைகள்...
நொறுங்கும் நீர்க் குமிழ்களோடு !
...........கா.ந.கல்யாணசுந்தரம்.
சிந்திக்க வைக்கும் வரிகள்...
பதிலளிநீக்குஅவ்வளவு தான் வாழ்க்கையே...
பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...
என் தளத்தில் :
"உன்னை அறிந்தால்... (பகுதி 1)”
எந்தக் காலத்திலும் நிலையாமை பற்றிய கவிதைகள் மனதை கவர்வதாக அமைகின்றன. அதுபோல இக்கவிதையும் மனதை ஈர்த்தது.
பதிலளிநீக்குநிலையற்ற குமிழி.
பதிலளிநீக்குநிலையற்ந வாழ்வின் ஒப்பீடு நன்று. நல்வாழ்த்து.
வேதா. இலஙங்காதிலகம்.