கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வெள்ளி, செப்டம்பர் 30, 2011

கொடியில் பூத்த முல்லை!



இருவர் தந்த அமுதம் - இளம்
காலைப் பொழுதின் குமுதம்!
சின்ன விழிகள் அசைத்து - இவள்
வண்ண கவிதை வடிப்பாள்!
மெல்ல நடந்து வந்து - ஒரு
முத்தம் தந்து சிரிப்பாள்
பேசும் மழலைக் கிள்ளை - இளம்
கொடியில் பூத்த முல்லை!
மொழிகள் அறிந்த உண்மை - பேசும்
மழலைக்கு இணை ஏது?

......கா.ந.கல்யாணசுந்தரம்.

4 கருத்துகள்:

  1. உண்மைதான் பேசும் மழலைக்கு இணை ஏது?.....அருமை ...மிக்க நன்றி பகிர்வுக்கு வாருங்கள் என் தளத்திற்கும் இன்று ஒரு பாடல் வரி உள்ளது .தங்கள் கருத்தினையும் எதிர்பார்க்கின்றேன் .

    பதிலளிநீக்கு
  2. மொழிகள் அறிந்த உண்மை - பேசும்
    மழலைக்கு இணை இல்லை!

    ஏது? என்ற எதிர்மறை வினாவில் முடிந்தாலும் நானும் இல்லையென்றே முடிக்கின்றேன்..
    நல்லக் கவிதை.
    வாழ்த்துக்கள். நன்றி.
    தமிழ் விரும்பி - ஆலாசியம் கோ.

    பதிலளிநீக்கு