கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

ஞாயிறு, ஏப்ரல் 12, 2020

செவ்வந்தி மேலே ஒரு பனித்துளி - நூல் அணிந்துரை - கா.ந.கல்யாணசுந்தரம்

கவியுலகப் பூஞ்சோலை இலக்கியக் குழுமம் தமது ஆண்டுவிழாவில் வெளியிட்ட ஹைக்கூ கவிஞர்களின் தொகுப்பு நூலான " செவ்வந்தி மேலே ஒரு பனித்துளி " நூலுக்கான அணிந்துரை ...Image may contain: கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம், textImage may contain: textImage may contain: textImage may contain: textNo photo description available.Image may contain: text

திங்கள், ஏப்ரல் 06, 2020

வேளாண் அறிவியலின் மதிப்புறு முனைவர் நம்மாழ்வார்

அறிவியல் வேளாண்மையில் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தி வாழ்ந்த நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாள் இன்று.
போற்றுவோம் அவரை.
......கா.ந.கல்யாணசுந்தரம்

  • மரபுவழி விதையுலகை
அடையாளப் படுத்தியவர்
உழவின் ஆசான் நம்மாழ்வார்

  • இயற்கை விவசாயம்
இவரது மூச்சு
நம்மாழ்வார்

  • பன்னாட்டு வேளான்மைப்
புரட்சிக்கு வித்திட்டவர்
நம்மாழ்வார்

  • இயற்கை உழவாண்மை
பேரிகையின் ஆசிரியர்
நம்மாழ்வார்

  • வேளாண் துறையில்
மரபணு சோதனையை எதிர்த்தவர்
நம்மாழ்வார்

  • வேளாண் அறிவியலின்
மதிப்புறு முனைவர்
நம்மாழ்வார்

  • தமிழின வாழ்வியல்
பல்கலைக்கழகமாய் நடமாடியவர்
நம்மாழ்வார்


......கா.ந.கல்யாணசுந்தரம்
Image may contain: one or more people, people standing, beard and outdoor

வியாழன், ஏப்ரல் 02, 2020

கவிக்கோ துரை வசந்தராசன் அவர்களின் விமர்சனம்...வெளிச்ச மொழியின் வாசிப்பு

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
நூல் அறிமுகம்
நூல்: வெளிச்ச மொழியின் வாசிப்பு
ஆசிரியர் :கா.ந.கல்யாணசுந்தரம்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
நாடறிந்த கவிஞர்.!
உலக தமிழ் ஹைக்கூ மன்றத்தின் தலைவர்!
தன்முனைக் கவிஞர்களின் தலைவர்!
கவிதையின் அனைத்து வடிவங்களிலும் பயணிப்பவர்!
கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்கள்.
அவரது புதுக்கவிதைப் புதையலொன்றைச் சமீபத்தில்தான் எனக்களித்தார்.
புதையலைப் பிரித்துப்பார்க்கிற பெரும்வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது.
கிடைத்த புதையலைப் பங்குவைப்பதில் பெருமகிழ்ச்சியெனக்கு.
"வெளிச்சமொழியின் வாசிப்பு "
திறக்கும்போதே மகுடமணிந்து காட்சியளிக்கிறது.என் இனிய நண்பர்
ஆரூர் தமிழ்நாடன் அவர்கள் ஆசையோடு ஆராதித்திருக்கிற அணிந்துரையால்.
இந்நூல்
புதுக்கவிதையும் நவீனத்துவமும் கலந்த கலவை.
வாழ்வியலோடு நிறைந்த மனிதநேயம் நிரம்பிய கவிதைகளோடு கவிஞரே நம்மோடு பயணிக்கும் அனுபவத்தை உணரவைக்கிறார்.
கிராமியத்தின் விழுமியங்களை விரித்துவைக்கிறது.
சமூக அவலங்களுக்கான எதிர்ப்பினை பதிவுசெய்கிறது.
தத்துவ வெளிகளும் தலைகாட்டுகிறது.
முற்றிய இளமையின் முத்தமுற்றத்தை
சத்தியவாக்குகளால் சமைத்துவைத்திருக்கிறது.
*
இது வெற்றியின் முகம்.
இந்நூலில்....கவிஞர்...
தலைப்புகளைக் கவிதைக்குள் வைத்துத்
தேடாமலேயே தலைகாட்ட வைக்கிறார்.
*
கிராமத்துத் தடங்களை கவிப்படமாக்கியவர்
"இவையாவும் இருந்தனவென்று
சாட்சி சொல்ல
இன்றும் நிமிர்ந்து நிற்கிறது
என் கிராமத்துச் சுமைதாங்கிக் கல் "
என்று சுமைதாங்கிக்கல்லில் தன் கவிப்படக் கருவியை நிறுத்துகிறார்.
அவர் நிறுத்திய இடத்திலிருந்து நம்மை ஓடவைக்கிறார்.
"மரங்கொத்தியின்
பொந்துக்குள்
கிளைகளின் வாழ்க்கை " என்று
வாழ்வானுபவத்தை விரித்துவைக்கிறவர்
"இரவின் மடியில்
உலகின்
பகல்பொழுது "
என்பதில் நம்மைத் தேடவைக்கிறார்.
*
ஒரு நீர்த்தேக்கத்தைப் பார்த்தபடி படம்பிடித்துக்கொண்டே வந்தவர்
. "நீர்த்தேக்கத்தில் எனது
எண்ணப்பறவைகள் மட்டும்
கானல்நீரை அருந்திக்கொண்டிருந்தன"
என்று கவிதையை நிறைவுசெய்கிறார்.
நிறைவுறாத நீர்த்தேக்கத்தில் நம்மை நிறுத்தி வைக்கிறார்.
*
முதிர்கன்னிகளைப் பேசவந்தவர்,இளைய தலைமுறைக்கு வேண்டுகோள் வைக்கிறார்
முதிர்கன்னியாய் முகமழியும் மகளிருக்காக
'நடக்கமுடியாத நதிகள்
பூகோள நிலப்பரப்பில் வேண்டா!
புதியதோர் உலகு செய்வோம் "
என்று புதிய நெம்புகோல்களுக்குப் புத்தாக்கம் தருகிறார்.
*
ஒரு கவிதையில்
"தன்னைத் தேர்ச்சக்கரத்தில்
ஏற்றும்படி காத்திருக்கிறான்
மனுநீதிச் சோழன்
நீதிமன்றத்தில் '
என்று
கழுவில் ஏற்றப்படும் நியாயங்களைக்
காண வைக்கிறார்.
*
" அடையாளத்தைத் தொலைத்த
வீட்டருகில்
ஓர் அஞ்சல்பெட்டி
முகவரியைக்
கொடுத்துக்கொண்டிருக்கிறது"
இந்தக் முகவரி நம்மை நெடுநேரம் நிற்கவைத்துவிடுகிறது.
*
இப்படி நூறு கவிதைகள்.
நூறு கவிதைகளிலும் நூற்றுக்கணக்கான கவிதைகள்.
*
சுருங்கக் கூறின்
அணிந்துரையில் தமிழ்நாடன் குறிப்பிட்டிருப்பதுபோல்
கவிச்சுடர் தன் திசைகளை அகலப்படுத்தியிருக்கிறது.
"அண்மைக்காலத்தில் வந்த தொகுப்புகளில் ,செறிந்த கவிதைத் தொகுப்பு என என்னால் எந்தச்சபையிலும் பரிந்துரைக்க முடியும்"
என்று ஆரூர் தமிழ்நாடன் முன்மொழிந்திருப்பதை நான் வழிமொழிகிறேன்.
அனைத்துக் கவிதைகளையும் சொல்ல ஆசைதான்.
அந்த ஆசையை நீங்கள் நூல்வாங்கி நிறைவுசெய்துகொள்ளுங்களேன்.
*
இந்நூலை
கவிஓவியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
மயிலாடுதுறை இளையபாரதியின் நேர்த்தியான வடிவமைப்பு எப்போதும்போல் இப்போதும் சிறப்பு !
வெல்க !
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
கவிஓவியா வெளியீடு
68/21,திருவள்ளுவர் தெரு
அன்பழகன் நகர்,செம்பியம்,சென்னை --11
எண் :9840912010
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

No photo description available.

Image may contain: கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம், beard

144...

144....
+++++++++++++++++++++++
* உதிர்ந்த சருகு
மிதிபடவில்லை சாலையில்
ஊரடங்கு உத்தரவு
* வாலாட்டியபடி
தெருவில் நாய்
உணவிடுவோர் காணவில்லை
* தார்ச்சாலைகள் முழுக்க
கானல் நீர் பாய்கிறது
தண்ணீர் தேடும் ஏழை
* சாலையோரம் ஓய்வில்
பாரம் சுமந்த வண்டிகள்
சோகம் சுமக்கும் தொழிலாளி
* யாரும் வரவில்லை
பட்டினியோடு ஜோதிடன்
விடுதலையில் கிளிகள்
* பீதியில் வெளுத்த முகம்
பசித்த வயிறு
சலவைத் தொழிலாளி
............கா.ந.கல்யாணசுந்தரம்

Image may contain: outdoor

வெள்ளைக் குதிரை கிடைக்கவில்லை ?

காலத்தின் வயதில் யுகங்கள்
எல்லைகளைக் கொண்டுள்ளது...
கலியுகமே...நீ
வயதின் களங்கமா?
உன்னோடு சாத்தான்கள்
உலா வருகின்றனவே !
கலியுகத்தின் தொடக்கத்தில்
அந்த மாயக்கண்ணன்
அவதரித்தானா ?
எங்களின் முதல் கணிதவியல்
மேதாவி ஆர்யபட்டா
கலியுகத்தின் தொடக்கத்தில்
கோள்கள் இடம்பெயர்ந்த
அதிசயத்தைக் கூறினார் !
இது மொஹஞ்சதாரா கல்வெட்டின்
சாட்சியம் எனக் கூறுகிறார்கள்..!
கலியுகத்தில் அதர்மம் தழைக்க
விவேகமழிந்தோர் அறிவியலை
அழிவுக்கே பயன்படுத்துகிறார்கள் !
ஆதிக்க சக்திகள்
தனிமனிதனை ஒரு கிராமத்தை
நகரத்தை….ஏன் ஒரு நாட்டையே
துண்டாட வைக்கிறது!
மருத்துவமில்லா நோய்களைப் பரப்பி
மனிதத்தை வீழ்த்துகிறது !
மலையிலிருந்து உருளும்
பாறைபோல் மக்கள்
நற்குணமிழந்து நலமிழக்கிறார்கள் !
இறைவா..உனக்கு இன்னுமா
வெள்ளைக் குதிரை கிடைக்கவில்லை ?
கொரோனா உயிர்க்கொல்லி
உலகையே அழிக்கிறதே….
கலியுகத்தின் கணக்கு முடியவில்லையா?
மௌனம் களைந்து மீட்டெடு...
அபயக் குரல்கள்
வானைப் பிளப்பதற்குள் வந்துவிடு !
………..கா. ந. கல்யாணசுந்தரம்

Image may contain: 1 person

செவ்வாய், டிசம்பர் 24, 2019

ஒற்றை எறும்பாய் அந்த ஈரத்தரையில்

மௌனித்த இரவுத் திண்ணையில் 
யாரோ வாசிக்கிறான் புல்லாங்குழல்... 
கடலின் மொத்த அலைகளையும் 
வாரிச் சுருட்டி தனது விரல்நுனிகளில் 
வடியவைக்கிறான் இசையின் அலைகளை !
உனக்கும் எனக்குமான இடைவெளிகளை 
இட்டு நிரப்புகிறது இந்த இரவு நேரம் ...
அடர் பனிப்பொழிவில் உனது 
உருவம் மெல்லிய நீரோவியமாய்த் தெரிகிறது !
வியாபிக்கும் மௌனப் பெருவெளியில் 
இருவர் மட்டுமே அமர்ந்திருப்பது 
அந்த இசைக்கலைஞனுக்கு எப்படித் தெரியும் ?
எப்படியோ விடியலுக்குள் தெருக்களின் 
நீளம் குறையுமென்பது தெரிகிறது ...
தள்ளிப்போக எனக்கு விருப்பமில்லை ....
சாணம் மெழுகிய தெருவாசலில் 
அரிசிமாவுக் கோலத்தை ருசிக்கக் காத்திருக்கும் 
ஒற்றை எறும்பாய் அந்த ஈரத்தரையில் 
நான் மெல்ல ஊர்ந்துகொண்டிருப்பேன் 
உனது காலடித்தடம் ஸ்பரிசிக்கும் வரை !

...........கா.ந.கல்யாணசுந்தரம்

திங்கள், அக்டோபர் 28, 2019

சுஜித் கற்றுத்தரும் பாடங்கள்....


சுஜித் கற்றுத்தரும் பாடங்கள்....

1. பெற்றோர்கள் தமது குழந்தைகள் வளர்ப்பில் மிகக் கவனமாக இருக்கவேண்டும். அலட்சியப்போக்கு உயிருக்கே ஆபத்து என்பதை உணர்த்துகிறது.

2. குறிப்பாக பல்வேறு விபத்துகள், இயற்கை சீற்றங்கள் மேலும் பல்வேறு குற்றச்செயல்களை தடுக்க / எதிர்கொள்ள நம்மிடம் விழிப்புணர்வு இல்லை. மேலும் வருமுன் காத்தல் என்ற புரிதல் இல்லாமை.

3. அரசு திட்டமிடலில் தேவையற்ற திட்டங்களுக்கு பெரும் நிதி ஒதுக்கப்பட்டு வீணடிக்கப்படுகிறது. மனித உயிர் காத்தலுக்கு திட்டமிடலும் நிதி ஒதுக்கீடும் மிக மிக குறைவு.

4. துறைசார்ந்த பணியாளர்கள் தங்களது பணிகளை நேரத்தோடு செயல்படாததால் விதிமீறல்கள் எளிதாக தலைதூக்கி அவலங்கள் நடைபெறுகிறது

மக்கள் கண்மூடித்தனமாக அரசு அதிகாரிகளை இழிவு படுத்துவது தவறு. குழந்தை சுர்ஜித்தை மீட்க அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் எடுத்துவரும் முயற்சிகள் எதிர்பார்த்தலுக்கு மேலாகத்தான் இருக்கிறது.

உள்ளதை உள்ளபடி நேரடி ஒளிபரப்பு செய்யும் ஊடகங்களையும் குறை சொல்வதை தவிர்த்துப் பாராட்டுங்கள். மக்களுக்கு இதனால் அதிக அளவு விழிப்புணர்வு ஏற்படுகின்றது.

விமர்சனக் கோணங்கள் பல்வேறு வகைதான் இருக்கும். எனினும் இயற்கை சார்ந்த சவால்களை எதிர்கொள்வது என்பது சாதாரணமல்ல.

இடத்தின் சூழல் குழந்தையை மீட்டெடுக்க தாமதம் ஆகிறது என்பது கண்கூடு. கடினப் பாறை அதிநவீன எந்திரத்தாலும் தகர்ப்பது கடினமாக இருப்பது அரசு எதிர்கொள்ளும் சவால்.

இம்மாதிரி நேரங்களில் வீணான விமர்சனங்களை தவிருங்கள். எவரையும் திணறடிக்கும் / மகிழவைக்கும் திறன் இயற்கை சார்ந்த சூழலுக்கு உண்டு என்பதை மறுக்க முடியாது.

முயற்சி வெற்றியடையட்டும்.

........கா.ந.கல்யாணசுந்தரம் 

வியாழன், அக்டோபர் 17, 2019

வாழிய எம்மான் நீ...இவ்வையகத்தே !

ஆண்டுகள் பலவானாலும்
கண்ணதாசனே உன்னை மறப்பார்
இம்மண்ணில் யாருளர் ?
மாண்ட என் அன்னை மீண்டும் வரின்
ஒரு வரம் கேட்பேன் ....
தாய்ப்பாலோடு கண்ணதாசன்
வரிகளை எனக்குப் பிசைந்து
ஊட்டவேண்டுமென்று !
உனது நினைவு நாளில் எனது
எண்ணம் முழுதுமுன் வண்ண வரிகள் !
சற்று நினைவுகூருகிறேன்......
வாழிய எம்மான் நீ...இவ்வையகத்தே !

..............கா.ந.கல்யாணசுந்தரம்

" பூ மணம் கொணடவள் பால் மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
மாமனைப் பாரடி கண்மணி என்றாள்
மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டான் (மலர்களைப்போல் )"

" தாயின் பெருமை மறக்கின்றான்
தன்னலச் சேற்றில் விழுகின்றான்
பேய் போல் பணத்தைக் காக்கின்றான்
பெரியவர் தம்மைப் பகைக்கின்றான்
(ஒருவன் மனது ஒன்பதடா)"

" பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக் கண்டான் பணம்தனைப் படைத்தான்
(மனிதன் மாறிவிட்டான்)"

" ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக் களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு!
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு! (மயக்கமா )"

" தென்னை மரத் தோப்பாகத் தேவாரப் பாட்டாகப்
புன்னை மரம் பூச்சொரிய சின்னவளே நீ ஆடு!
கண்டாங்கி முன்னாட கன்னி மனம் பின்னாட
கண்டு கண்டு நானாட செண்டாக நீ ஆடு! (கட்டோடு)"

" கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா!
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா!
அம்பிகாபதி அணைத்த அமராவதி-மங்கை அமராவதி
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி! - என்றும் நீயே கதி! (கல்லெல்லாம் )"

" பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே! (சிட்டு)"

" மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் – அவர்
மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் – நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை(ஒரு கோப்பையிலே ) "

........கண்ணதாசன்

tag

வானம் தொடும் வண்ணத்துப் பூச்சிகள்

வெள்ளி, அக்டோபர் 05, 2018

உளவியலின் உன்னதம் ....

உளவியலின் உன்னதம் ....
*******************************************
# உயர்வின் படிகள்
உன்னருகே இருக்கிறது 
மன்னிக்கும் தன்மை
# நமக்குள் ஒளிவெள்ளம்
பெருக்கெடுத்து ஓடுகிறது
தனித்தன்மை கண்டறிதல்
# திட்டமிடலில் எப்போதுமே
கரைந்து போகிறது
மனஅழுத்தம்
# சிந்திக்காமல் நாம்
உடைத்தெறிவோம்
நிகழ்காலத் தடைக்கற்கள்
# இலக்கினை அடையும்
போராட்டத்தில் வெற்றிகள்
சாதனையாளன் அணுகுமுறை
# மனஉளைச்சலின்
இமாலயத் தோற்றத்தில்
தூக்கமின்மை
# உறங்குதலும் உடற்பயிற்சியும்
துணைநிற்கின்றன
தியானத்தின் எல்லைகளில்
# எப்போதும் தேவையில்லை
கழற்றி எறியுங்கள்
தாழ்வு மனப்பான்மை
# மன அழுத்தத்தின்
முதன்மைக் காரணிகள்
எதிர்மறை எண்ணங்கள்
# இயற்கையோடு இயைந்த
வாழ்வோடு பூத்திருக்கிறது
வளமான வாழ்வு
# கொண்டுவந்தது ஏதுமில்லை
எடுத்துச் செல்வதும் ஒன்றுமில்லை
மனிதம் வாழ வாழ்வோம்
..............கா.ந.கல்யாணசுந்தரம்

செவ்வாய், செப்டம்பர் 25, 2018

வியப்பில் ஆழ்த்தும் நியூயார்க் நகரில்.....

08.09.2018 அன்று நியூயார்க் நகரம் சென்று வந்தோம். நூறு ஆண்டுகளைக் கடந்த வானம் தொடும் கட்டிடங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு பின் எத்தனையோ வர்த்தக மைய்யக் கட்டடங்களைக் கட்டி நம்மை பிரம்மிக்கச் செய்திருக்கிறது இந்த முதலாளித்துவ வல்லரசு நாடு.
மேலும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது அமெரிக்கா சுதந்திர தேவி சிலை (Statue of Liberty ) . 1886 ஆம் ஆண்டு அமெரிக்கா தனது நாட்டுக்கு அர்ப்பணித்த இந்த சிலை 305 அடி உயரமுள்ளது. பிரான்சு நகரில் வடிவமைக்கப்பட்ட சிலை.
வியப்பில் ஆழ்த்தும் நியூயார்க் நகரில் மற்றுமொரு இடம் time square எனச் சொல்லப்படும் வர்த்தக சாலை.இங்கே இரவில் கண்கொள்ளாக் காட்சியாக LED விளம்பர ஒளிரும் பலகைகள் கட்டிடங்களின் வனப்பை மெருகூட்டுகின்றன.இங்கே ஜனவரி ஒன்று ஆண்டுப்பிறப்பு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
என்னதான் என்னை வியப்பில் ஆழ்த்தினாலும் நமது நாட்டின் பச்சைப் பசேல் என்ற வயல்வெளிகளைக் காணும் போது ஏற்படும் ஆனந்தம் மட்டுமே எனக்கு அலாதியானது.
...........கா.ந.கல்யாணசுந்தரம்
Image may contain: Dharmambal Rathinam, smiling, standing and outdoor
Image may contain: one or more people and outdoorImage may contain: 2 people, including கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம், people standing, sky and outdoor

வியாழன், ஆகஸ்ட் 23, 2018

கவிஞர்...புலவர்....படைப்பாளி....

கவிஞர்...புலவர்....படைப்பாளி....
*******************************************
கவிஞர்,புலவர் மற்றும் படைப்பாளி இந்த மூன்றினுக்கும் உள்ள வேறுபாடுகள் நாம் அறிய வேண்டும்.
அண்மையில் நான் பதிவுசெய்த தமிழ் இலக்கிய பணியில் இன்றைய முகநூல் குழுமங்கள் என்ற பதிவால் இதனை இங்கே கருத்திட விரும்புகிறேன்.
கவிஞர் :
இந்தப் பட்டப்பெயர் மற்றவர்கள் சூட்டினாலும் தமக்குத் தாமே சூட்டிக்கொண்டாலும் தவறில்லை.
பல கவிதைகள் எழுதி உங்களின் உச்சாணியில் இருப்பவரும், ஒரே ஒரு கவிதை எழுதி பல்லோராலும் பாராட்டு பெற்றவரும் கவிஞர் தான். மறுப்பதற்கு இல்லை. பிறவியிலேயே கவித்துவம் பெற்ற அருளாளர்கள் இருக்கிறார்கள். படிப்பறிவு ஏதுமின்றி பட்டறிவால் கவிஞர் ஆனவர்கள் ஏராளம். உதாரணமாக கவிஞர் பட்டுக்கோட்டையார், கவிஞர் கண்ணதாசன் போன்றோர்கள்.
ஆக கவிஞர் எனும் பட்டம் தமிழின் வளமையை அதன் தனித்தன்மையை செம்மையாய் மரபு, புதுக்கவிதை மற்றும் குறுங்கவிதைகள் , ஹைக்கூ , நாட்டுப்புறப் பாடல்கள் வழி எழுதுபவர்கள் பெற்றுள்ள நடைமுறை அடைமொழி. இதற்கு ஒரு பதிவு பெற்ற சங்கமோ, அமைப்போ கொடுப்பது இல்லை. மக்களாலும் தனக்குத் தானே சூட்டிக் கொள்ளும் ஒரு பட்டம் என்றே அறியலாம்.
புலவர்:
புலமைத் தகுதி சிலருக்கு மட்டுமே வாய்க்கும்.ஒரு மொழியில் புலமை பெற்று சிறப்புறுதல் வேண்டும். இதற்கு இலக்கணம்,மொழியின் தொன்மை குறித்து படித்தறிதல் அவசியம். தமிழக கல்லூரிகள் புலவர் பட்டங்களை தேர்வுகள் மூலம் அளிக்கின்றன.பாடத் திட்டங்களும் பல்வேறு நிலைகளில் உள்ளன. மொழியில் சிறந்த புலமை பெற்று மரபுப் பாடல்களை இலக்கணத்துடன் இயற்றி வாழ்ந்தவர்கள் சங்க காலத்தில் அதிகம். புலவர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இதனை போட்டுக்கொள்ளலாம் என்பது எனது கருத்து.
படைப்பாளி:
இங்கு தான் பலருக்கும் சந்தேகம் வரும். படைப்பாளி என்பவன் தனது தனித்த திறனில் இயல் இசை நாடகம் எனும் முத்தமிழில் சிறந்த படைப்புகளை இந்த தமிழ்ச் சமூகத்துக்கு கொடுப்பவன். படைப்பு என்பது பல்வேறு அம்சங்களை பொறுத்தது. எழுத்து வடிவம் கொண்டவை அனைத்தும் படைப்பாகாது. படிப்போருக்கு நல்ல படிப்பினைத் தருவதாகவும் இருக்கவேண்டும்.துறைதோறும் நல்ல படைப்பாளிகளின் படைப்புகள் காலம் கடந்து நிற்கின்றன. சிறந்த படைப்பாளிகளுக்கு விருதுகள் தானாகவே வந்து சேரும் என்பது உறுதி.
முகநூல் வழி கவிஞர்கள் சிறந்த படைப்பாளிகளாக உருவாகவேண்டும் என்பது எனது விருப்பம்.
எனக்குத் தோன்றிய கருத்துகளை இங்கே பதிந்து வருகிறேன். மேலும் சிறந்த கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
அன்பன்,
கா.ந.கல்யாணசுந்தரம்

தமிழ் இலக்கியப் பணியில் இன்றைய முகநூல் குழுமங்கள் - தொடர்ச்சி

தமிழ் இலக்கியப் பணியில் இன்றைய
முகநூல் குழுமங்கள் - தொடர்ச்சி
***********************************************************************
21.08.2018 எனது பதிவின் பின்னூட்டங்களில் எமக்கு பலர் பாராட்டியும் இந்தப் பதிவு தக்க நேரத்தில் பதியப்பட்ட சிறப்பு என்றும் தெரிவித்துள்ளனர். சிலர் குறிப்பாக Venkatesan RamalingamVathilaiPrabaவெற்றிப்பேரொளிமுனைவர் ம.ரமேஷ்மற்றும் இராம.வேல்முருகன் வலங்கைமான் ஆகியோர் பின்னூட்டங்களுக்கு பதில் கூறவேண்டிய நிலையிலும் மேலும் குழுமங்கள் தம்மைச் செழுமைப் படுத்திக்கொள்ளவும் இந்தப் பதிவு அத்தியாவசியப்படுகிறது.
* தமிழகத்தில் பல்வேறு பதிவுபெற்ற பேரவைகள்,சங்கங்கள்,இலக்கிய அமைப்புகள் ,சிற்றிதழ் அமைப்புகள் கவிஞர்களுக்கு
கவிமாமணி,கவிமணி,கவிச்சுடர், கவிக்கோ ,ஒட்டக்கூத்தர்,நக்கீரன்,ஒளவையார்,கம்பர்,கபிலர்,திருவள்ளுவர்,பாரதி,பாரதிதாசன் போன்ற விருதுகளை வழங்கி வருகின்றன. இவை பெரும்பாலும் மூத்த தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் அரசு விருதுகளும் இப்படியே.
* கடந்த மூன்று ஆண்டுகளாக முகநூல் குழுமங்கள் பல்வேறு வகையான விருதுகளையும், மேற்கண்ட பெயருடைய விருதுகளையும், சான்றுகளையும் வழங்கி வருகின்றன. இதில் தகுதியுடைய சிலரும்,ஒன்றிரண்டு கவிதைகள் எழுதிய புதியவர்கள் பலரும் அடங்குவர்.
* மாவட்ட அளவில் மட்டைப்பந்து போட்டியிலும் பன்னாட்டளவில் நடைபெறும் போட்டிகளிலும் (கிரிக்கெட்) Man Of The Match கொடுக்கப்படுவதிலும் வேறுபாடு உண்டு. ஆனால் மாவட்ட அளவில் பெரும் விருதுதான் அந்த வீரரை பன்னாட்டு அளவில் போட்டிகளில் பங்கேற்க உதவுகிறது/ஊக்கமூட்டுகிறது என்பதில் ஐயமில்லை.
இதுபோலவே அங்கீகாரம் பெற்ற சிறந்த இலக்கிய அமைப்புகள் கொடுக்கும் விருதுகளை எளிமையாய் முகநூல் குழுமங்கள் பலருக்கும் கொடுப்பது ஊக்கப்படுத்தவே என உணரவேண்டும். தமது பெயருக்கு முன்னால் விருது பெயர்களை சேர்த்துக்கொள்ள தமக்கு அந்தத் தகுதி உள்ளதா என கவிஞர்கள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதே விருதுகளை அங்கீகாரம் பெற்ற இலக்கிய அமைப்புகளிடம் பெற முயற்சி செய்ய வேண்டும்
* ஆண்டுவிழா நடத்த அன்பளிப்பு பெறுவதில் தவறில்லை. ஆனால் அன்பளிப்பு கொடுத்தால்தான் சான்றிதழ்கள், விருதுகள் எனும் நிலை மாறவேண்டும். குழுமங்கள் சில மட்டுமே இலக்கியத் தொடர்புடைய, சிறந்த தமிழ்ப்பணியாற்றும் கவிஞர்களுக்கு விருதுகள் தருகின்றன. பல அமைப்புகள் மாற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
* முகநூல் குழுமங்கள் கவிதை போட்டிகளைக் குறைத்துக்கொண்டு பயிற்றுவித்தலில் ஈடுபட வேண்டும். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் சில குழுமங்கள் பயிற்றுவித்தலில் முனைப்புடன் ஈடுபட்டு வருவது சிறப்பு.
* ஆண்டு முழுக்க முகநூல் குழுமங்களில் போட்டியில் பங்குபெறுவதோடு தமிழ் இலக்கியச் சுவை ததும்பும் முன்னோர்களின் கவிதைகளை ஆய்வு செய்து கட்டுரைகள் வழங்குதல் சிறப்பு.
* முகநூல் குழுமங்களில் சில விரும்பத்தகாத நிகழ்வுகளால் புதிய குழுமங்கள் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்படி உருவாக்கினாலும் தனிப்பட்ட பாதிப்புகளுக்கு பொதுவெளியில் குழும உறுப்பினர்களை அவமதிப்பதை தவிர்க்க வேண்டும்.
* முகநூல் குழுமங்கள் போட்டி போட்டுக்கொண்டு விருதுகளை அள்ளித் தருவதை தவிர்க்கலாம். ஆண்டுமுழுக்க தமிழ்ப்பணியாற்றும் தேர்ந்த கவிஞர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் கொடுத்து சிறப்பிக்கலாம்.
* முகநூல் குழுமங்கள் தங்களது சான்றுகளில் நிறுவனர் / தலைவர், செயலர் மற்றும் சிறப்பு விருந்தினர் கையொப்பமிட்ட சான்றுகளை வழங்குதல் வேண்டும். சிறப்புடையதுமாகும்.
* குழுமங்கள் இனிவரும் காலங்களில் கவியரங்க அமர்வுகளை குறைத்து சிறப்பான திட்டமிடலை கையாளவேண்டும். ஐந்து நூல்களுக்குமேல் மேடையில் வெளியிடுவதை தவிர்த்தல் நல்லது.
விருது வழங்கல் நிகழ்வை நேரத்தோடு துவங்குதல் குழுமத்துக்கு ஆரோக்கியமானது.
* குழும விழாக்கள் தமிழ்ப் பண்ணோடு தொடங்கி நாட்டுப்பண்ணோடு முடித்தல் அவசியம் எனக் கருத வேண்டும்.
* நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் நீண்ட நேரம் பேசி மற்றவர்கள் நேரத்தை எடுத்துக்கொள்வதை தவிர்த்தல் நன்று.
* நீண்ட தொலைவில் இருந்து வரும் கவிஞர்கள், வெளியூர் கவிஞர்கள் என முன்னதாக வரிசைப்படுத்தி , மேடையில் விருதுகளை சிறப்பாக அவசரமின்றி அளிக்கலாம். கவிஞர் வெற்றிப்பேரொளி சொன்னதுபோல் கிளைமாக்ஸ் காட்சிகளை தவிர்க்கலாம்.
இவையாவும்...எமக்குத் தோன்றிய கருத்துகள். முகநூல் குழுமங்கள் தம்மைச் செழுமைப் படுத்தி தமிழ்ப்பணி ஆற்றுங்கள். விருதுகள்/சான்றுகள் தேர்ந்த கவிஞர்களுக்கும் சான்றோர்களுக்கும் தொடர்ந்து வழங்குங்கள்.
அன்புடன்,
கா.ந.கல்யாணசுந்தரம்

தமிழ் இலக்கியப் பணியில் இன்றைய முகநூல் குழுமங்கள்

தமிழ் இலக்கியப் பணியில் இன்றைய
முகநூல் குழுமங்கள்
***********************************************************************
அன்பார்ந்த முகநூல் தோழமைகளே..
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தமிழ் முகநூல் குழுமங்களின் எண்ணிக்கை அதிகரித்துதான் வருகிறது. ஆனால் பல குழுமங்களின் இலக்கியப் பணியை பாராட்டாமல் இருக்க முடியாது.
தமிழ் மொழியின் ஒலிவடிவத்திலிருந்து எழுத்துவடிவம் உருவான வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்து வந்துள்ளது.
கல்வெட்டுகள் ஓலைச்சுவடிகளாய் இருந்த தமிழ் இலக்கியம் இன்று மென்பொருள் ஊடகமாய் அகில உலகமெங்கும் தனது பயணத்தை மேற்கொண்டு தொன்மையின் சிறப்பை வென்றுள்ளது.
மொழியின் தொன்மை, வீச்சு, நடை, இலக்கணம், மொழியின் பரிணாமம் போன்றவற்றைப் பகிர்வதில் இன்றைய முகநூல்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. எவராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.
இதிகாசங்கள், பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்கள்,
நாவல்கள், மரபு இலக்கணம், பல்வேறு கவிதை நூல்கள் ,சங்கம் தழுவிய நூல்கள், நாடகங்கள், இசை விற்பனர்களின் வரலாறு, இயற்றமிழ் அறிஞர்களின் உரைகள், தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரம் போன்ற அனைத்தையும் தற்போது மின்னூலாகி வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம் .
இவையனைத்தும் மின்னூலாக இருந்தும் அனைத்தையும் நம்மால் படிக்கும் நேரம் இருக்கிறதா ? ஆனால் அவ்வப்போது இலக்கியச் சுவைகளை மேற்கோளுடன் முகநூல் குழுமக் கவிஞர்கள் பகிர்வது சிறப்பானதாக இருக்கிறது.
பல முகநூல் குழுமங்கள் இன்றளவில் பல்வேறு கவிதை போட்டிகளை முன்வைத்து தற்கால இளைய தலைமுறையை ஊக்கப்படுத்தி பயிற்றுவிப்பது சிறப்பு.
எனக்குத் தெரிந்து அந்நாளில் இலக்கிய இதழ்களில் பங்களிப்பு செய்து வந்த மூத்தக் கவிஞர்கள் பலர் இப்போது முகநூல் குழுமங்களில் பதிவு செய்து பங்காளிப்பதை பார்க்கிறோம். இதனால் இன்றைய இளைய தலைமுறைகள் அவர்களுக்கு அறிமுகம் ஆனார்கள். அவர்களும் நமக்கு அறிமுகம் ஆகிறார்கள்.
முகநூல் குழுமங்கள் போட்டிகள் நடத்துவது தவறில்லை....அதேபோல் கவிதைப்போட்டிகளில் பங்கேற்போருக்கு சான்றுகள் வழங்குவதிலும் தவறில்லை. ஆனால் தரமான கவிஞர்களுக்கு வழங்க வேண்டும். புதியவர்களை பயிற்றுவிக்கவும் வேண்டும்.
முகநூல் குழும கவிஞர்கள் ஒருவரை ஒருவர் தாழ்த்திப் பேசுவது போன்ற தனிப்பட்ட கருத்துகளை தவிர்த்தல் அவசியம். கவிதைகளில் குறை நிறை இருக்கத்தான் செய்யும். அனைத்தையும் ஏற்கும் மனப்பான்மை இருந்தால் இலக்கிய பணியாற்றும் குழுமங்கள் மேலும் தமது பணிகளை செய்வதில் முனைப்புடன் செயலாற்றும்.
முகநூல் குழுமங்கள் ஆண்டுவிழாக்கள் தொடர்ந்து நடத்தட்டும். பலரது கைத்தட்டல்கள் சிறந்த ஓசை எழுப்ப வல்லது.
நன்கொடைகள் தவறில்லை ...ஆனால் அதுவே வியாபார திணிப்பாக இருத்தல் கூடாது.
விருதுகள் வழங்கினால் தான் ஊக்கப் படுத்தும் செயலாக இருக்கும். ஆனால் விருதுகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படக் கூடாது.
சிறந்த தமிழ் இலக்கிய பணியாற்றும் குழுமங்கள்
தொடர்ந்து ஆண்டுவிழாக்களை நடத்துவது சிறப்பு. போட்டிகள் நடத்துவதும் இனிமை மேலும் சான்றுகள் வழங்குவதும் கூடுதல் சிறப்பு.
தமிழகத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் நமக்கென விருது கொடுத்து விழா எடுக்கப்போவதில்லை (எதோ ஒரு சில நிறுவனங்கள் தவிர ).
விளையாட்டுப் போட்டிகளுக்கு (குறிப்பாக மட்டைப்பந்து ) தருகின்ற ஊக்கப்பரிசுகள் எப்போதும் இலக்கியத் துறைசார்ந்த விருதுகளுக்கு இல்லை. முகநூல் குழுமங்கள், சில இலக்கிய அமைப்புகள் தருகின்ற விருதுகளுக்காய் தொடர்ந்து சிறந்த படைப்புகளை அளியுங்கள் கவிஞர்களே..தங்களை முன்னிறுத்தி அடையாளம் கொள்ளுங்கள்.
வாழ்க தமிழ்..வளர்க சிறந்த முகநூல் குழுமங்கள் !
அன்பன்,
கா.ந.கல்யாணசுந்தரம் .
(குறிப்பு: சிறந்த முகநூல் குழுமங்களை நீங்களே அடையாளம் காணுங்கள் )

வெள்ளி, ஜூலை 13, 2018

தன்முனைக் கவிதைகள்....எழுத்தாளர் சாந்தா தத் அவர்களின் அணிந்துரை...

செறிவார்ந்த அகண்ட தமிழ் இலக்கியத் தளத்தில் இன்னுமொரு சேர்க்கை. " தன் முனைக் கவிதைகள் " ! தெலுங்கில்" நானிலு " எனும் பெயரில் பரவலாய் வரவேற்பும் அங்கீகாரமும் பெற்றுள்ள நாலடிக் கவிதை வடிவம் தமிழுக்கேற்ற சிறு மாற்றங்களுடன் தமிழில் " தன் முனைக் கவிதைகள் " 
எனும் தலைப்புடன் உதயமாகி....அதன் செழுமையான விளைச்சல் தான் " நான் நீ இந்த உலகம் " எனும் நூல்!. நானிலு கவிதைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய துவக்கப் புள்ளி. மற்றும் நூலின் அணிந்துரை தவிர மற்றபடி நூல் சார்ந்த குவினரின் திறமை..ஆர்வம் உழைப்பின் முன் என் பங்கு மிகச் சிறிதெனினும் இன்று எங்கெங்கும் பரவலாய் பேசப்படும் இந் நூலில் நானும் என்பதில் பெரு மகிழ்ச்சியும் நெஞ்சு நிறை நன்றியும்.! நூல் அமோக வெற்றி பெற இனிய வாழ்த்துகள்..

என் அணிந்துரை -----------------.
ஓவியா பதிப்பகம் வெளியீட்டில்,
கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் தொகுத்த
31 கவிஞர்களின் 465 கவிதைகள் இடம்பெற்ற
தமிழின் முதல் (நானிலு) தன்முனைக் கவிதைத் தொகுப்பான
"நான்..நீ..இந்த உலகம்" தொகுப்பில்...
ஹைதராபாத்தில் வசிக்கும்
மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளருமான
சாந்தாதத் அவர்களின் அணிந்துரையில்...
‘நானிலு’ குறித்த இந்த என் ‘மகாகவி’ கட்டுரை வாசித்த ஏராளமான வாசகர்களை.. குறிப்பாகக் கவிஞர்களை இவ் வடிவம் வெகுவாய் ஈர்க்க.. விளைவாய் அவர்களுக்குள் ஒரு உத்வேகம்..
தமிழில் சுயமாய் எழுத வேண்டுமென.. நம் பெரும் கவிஞர் மதிப்பிற்குரிய கல்யாணசுந்தரம் அவர்கள் உட்பட! உடன் அவர் சில நானிலு வகைக் கவிதைகள் முகநூலில் எழுதி என் கருத்து கேட்டார். தொடர்ந்து மளமளவெனக் கவிதைகள்.. குவிய.. முகநூல் அவற்றுக்கான அரங்கேற்ற மேடையானது.
இந்த ஆரவார வரவேற்பு கண்டு ஏற்கெனவே வெகுவாய் ஈர்க்கப் பட்டிருந்த கல்யாணசுந்தரம் அவர்கள் நானிலு உருவாக்கத்தை யொட்டி தமிழில் தன்முனைக் கவிதைகள் எனும் பெயரில் ஒரு புது வடிவம் கொண்டு வர ஆர்வம் கொண்டு... இம் முனைப்பும் வெற்றிச் சிகரம் தொட்டது முகநூல் ஆர்வலர்கள் அறிந்த செய்தி! அடுத்து தன்முனைக் கவிதைகள் எனும் அடையாளத்துடன் அவர் அஸ்திவாரம் அமைத்த புதுக் கூட்டில் வேடந்தாங்கல் போல் ஏராளமான பறவைகள். வந்து குவிந்தன.. என்ன.. வேடந்தாங்கல் பறவைகள் அப் பருவம் முடிந்ததும் மாயமாகி விடும். இந்தத் தன் முனைக் கவிதைக் கூட்டில் நாளுக்கு நாள் கவிதை வரவு அதிகரித்தபடியே... தம் இருப்பை நிலைப்படுத்தியபடியே..!
தமிழுக்கு புது வரவான இத் தளத்தின் கோலாகலம் விளைவித்த அதீத ஊக்கத்தின் முதல் ஆக்கபூர்வ விதை.. ஒரு தொகுப்பாகவே கொண்டு வந்தால் என்ன.. எனும் யோசனை. திரு. கல்யாண சுந்தரம் மற்றும் நண்பர்கள் சிந்தையில் விதைக்கப்பட... சிறந்த இலக்கியவாதியும், படைப்பாளருமான திரு. வதிலைபிரபா அவர்கள் பதிப்புலகில் தனி முத்திரை பதித்துள்ள தன் ஓவியா பதிப்பகம் மூலம் அத் தொகுப்பைக் கொண்டு வர முனைப்பு காட்டிய பேரார்வம்... திரு. கல்யாணசுந்தரம்... என் அன்புத் தோழி சாரதா கண்ணன், தோழர் அனுராஜ் ஆகியோர் உழைப்பு உற்சாகம் உந்து சக்தியின் அறுவடையின் விளைச்சல் தான் அவ் விதையின் கனி இதோ இன்று நம் கரங்களில்.. “நான் நீ.. இந்த உலகம்.”
31 கவிஞர்கள்... பல நூறு கவிதைகள்...! படிக்கப் படிக்க நிஜமாகவே நானும் நீங்களும் நாமுமாய் உலகம் பல் விடப் பரிமாணங்களில் என்னுள்ளும்.. கண் முன்னும்... விரிவதை நான் உணர்ந்தேன்ஞ் வாசிக்கும் நீங்களும் உணர்வீர்கள்..! கடுகில் காரம் என்பது போல் இச் சிறு வடிவத்துள் பெரும் தாக்கங்கள் அதிர்வலைகளாய் படர்ந்துள்ளன. ஒவ்வொன்றும் ஒரு புது உணர்வை, உலகைச் சுட்டுகின்றன.
‘நானிலு’ கவிதை வடிவம் தமிழில் இவ்வளவு வரவேற்பும் அங்கீகாரமும் பெற்றது மட்டுமன்றி அதன் தாக்கமாய் தமிழிலும் ‘தன்முனைக் கவிதைகள்’ எனும் தளம் ஜனனம் கண்டது உவகைக்குரிய விஷயம் தானே..! ‘சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம்’ என்ற மகாகவியின் பிற மொழிப் பற்றுக்கு எடுத்துக்காட்டாய் தெலுங்கில் முத்திரை பதித்த ஒரு பரிமாணத்தை நாம் விரும்பி ஏற்று, கௌரவம் கொடுத்து நம் மொழியிலும் வரவு வைப்போம் சில மாற்றங் களுடன் என்பது ஒரு அற்புத வெளிப்பாடு...! அதற்கான முயற்சியின் முதல் படியான “ நான் நீ இந்த உலகம்..” எனும் இந் நூல்.."
- சாந்தாதத், ஹைதராபாத்




நான்..நீ..இந்த உலகம் நூல் வெளியீடு...



01.07.2018ச்சார அமைப்பின் நிறுவனர் கோபாலன், சோழன் திருமாவளவன், தினமணி கவிஞர் திருமலை சோமு, பத்திரிகையாளர் கவிஞர் கணேஷ்குமார் கம்பன் கவிக்கூடம் செல்வராணி கனகரத்தினம், தன்முனைக் கவிதைத்தொகுப்பில் பங்குபெற்ற கவிஞர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர் . நிகழ்வை கவிஞர் பாரதி பத்மாவதி சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
நடைபெற்ற நான்..நீ..இந்த உலகம் நூல் வெளியீட்டு விழாவில் நக்கீரன் இனிய உதயம் இணையாசிரியர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்கள் நூலினை வெளியிட கவிஞர் குமரன் அம்பிகா பெற்றுக்கொண்டார். உடன் கவிக்கோ துரைவசந்தராசன் , கவிஞர் வதிலை பிரபா, தொகுப்பாசிரியர் கா.ந.கல்யாணசுந்தரம், கவிமாமணி வெற்றிப் பேரொளி, வாசாப்பேட்டை கம்பன்கழக பொருளாளர் திரு.ந.முருகன், கவிஞர் மயிலாடுதுறை இளைய பாரதி. விழாவில் கவிஞர் வசீகரன்,கவிஞர் உதய கண்ணன், வடசென்னைத் தமிழ்ச் சங்க தலைவர் எ.த.இளங்கோ ,தென்னிந்த சமூக கலா
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

புதன், ஜூன் 13, 2018

வெளிச்ச மொழியின் வாசிப்பு.....நூல் வெளியீடு...

20.05.2012 அன்று சங்கத் தமிழ்க் கவிதைப்பூங்கா , ஐந்தாம் தமிழ்ச்சங்கம் முதல் ஆண்டுவிழாவில் மதுரை திருமங்கலத்தில் ....
" வெளிச்ச மொழியின் வாசிப்பு " புதுக்கவிதை நூலினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றிய மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் மேனாள் இயக்குனர் முனைவர் பசும்பொன் அவர்கள்.  முதல் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார் புரவலர் குமரன் அம்பிகா அவர்கள். அருகில் சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவின் நிறுவனர் ந.பாண்டியராஜன், வீரபாண்டித் தென்னவன், அ.முத்துசாமி ஆகியோர்.